அரசியலில் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
பிரதமர் தமிழ்நாட்டுக்கு எட்டு முறை வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே பி நட்டா ரோடு ஷோ நடத்தினார்கள் . இருப்பினும் பாஜக வெற்றி பெறவில்லை.
அதிமுகவை பொறுத்தவரை நான் மட்டுமே அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன். 2019 மக்களவைத் தேர்தலை விட ஒரு சதவீத அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதால் அதிமுகவுக்கு இது வெற்றியே.
சசிகலா , ஓபிஎஸ் பிரிந்து சென்றதால் தான் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது. எஸ்.பி வேலுமணிக்கும் , எனக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அண்ணாமலை குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை .
அரசியலில் பாஜகவில் இருக்கும் அண்ணாமலையை அடையாளம் காட்டியது அதிமுக தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.