ரூ.1.25 லட்சம் வரை அரசு கடன்… குறைந்த வட்டியில் – எப்படி வாங்குவது? யார் யாருக்கு கிடைக்கும்?

39 0

ஆண், பெண் இருவருக்கும் ரூ.1.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இதனை கடனை பெற விண்ணப்பிப்பது எப்படி, விதிமுறைகள் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

சுய உதவிக்குழு மூலம் பல்வேறு திட்டங்கள் செய்யப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த குழுக்கடன் திட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் வழங்கப்படுகிறது. மகளிரின் வளர்ச்சிக்கு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, அதேபோல், அரசுப் பள்ளியில் பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், பெண்கள் தொழில் ரீதியாகவும் வளர்ச்சி பெற பல ஆண்டுகளாக சுய உதவிக்குழுக்கள் மூலமும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களின் தொழில்களை விரிவுப்படுத்தவும், புதிதாக தொழில் தொடங்கவும் சுய உதவிக்குழுக்கள் சார்பில் கடன் பெறும் திட்டமும் உள்ளது.  அந்த வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக குழுக்கடனாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் திட்டம் உள்ளது.  இந்த சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 கடன் வழங்கப்படும்.  மேலும் இந்த குழு தொடங்க சில விதிமுறைகளும் உள்ளன. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்களில் இந்த திட்டம் குறித்து விண்ணப்பிக்கலாம். மேலும் TABCEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.

Related Post

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அவங்க உடலில் என்ன நடக்குமாம் தெரியுமா?

Posted by - December 26, 2023 0
பிஸ்தா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். கூடுதலாக, எந்தவொரு ஆரோக்கியமான உணவுக்கும் இது ஒரு நல்ல கூடுதலாக இருக்கும். உங்கள் இரத்தத்தில் உள்ள…

தமிழ்நாட்டில் 5 நாட்கள் தொடர் கனமழை : வானிலை மையம் அலெர்ட்

Posted by - November 29, 2023 0
டிசம்பர் 3ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம்… தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்…

முகப்பருக்களைத் தடுக்க… தவிர்க்க..

Posted by - December 2, 2022 0
முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7…

“புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்தவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - January 20, 2025 0
கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில்…

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை – சிறுமியின் பெற்றோருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்..!!

Posted by - March 7, 2024 0
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *