கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் – கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்

24 0

வங்கிகள் விநியோகம் செய்யம் கிரெடிட் கார்ட்களின் பின்னணியில் உள்ள பலரும் அறியாதா, வியாபார திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

வங்கிகளின் லாபத்தின் ஆதாரமாக கிரெடிட் கார்ட்கள் உள்ளன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

கிரெடிட் கார்ட்:

இந்தியாவில் மக்கள் தங்கள் பெயர்களில் கிரெடிட் கார்ட்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் கிரெடிட் கார்ட்கள் மூலம் கடன் வாங்கி அத்தியாவசிய தேவைகள் உட்பட பலவற்றிற்காக செலவு செய்கின்றனர். எப்போதாவது ஏன் வங்கிகள் தாமாக முன்வந்து கிரெடிட் கார்டை வழங்குகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுந்துள்ளதா? உண்மையில், கிரெடிட் கார்டு வங்கிக்கு ஒரு பெரிய வருமான ஆதாரமாகும். இது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மேலும் மேலும் செலவு செய்ய ஊக்குவிக்கிறது.

கூவி கூவி விற்பனை:

கிரெடிட் கார்ட் என்பது ஒரு காலத்தில் அதிக வருமானம் கொண்டவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என கருதப்பட்டது. ஆனால், இன்று பெரும்பாலான நடுத்தர மக்கள் கைவசம் கிரெடிட் கார்ட்கள் உள்ளன. காரணம் வங்கிகள் அதற்கான விதிகளை கடுமையாக தளர்த்தி, பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தீவிரம் காட்டுகின்றன. செல்போன் மூலம் மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டு, கிரெடிட் கார்ட்டை பயன்படுத்துமாறு தூண்டிவிடுகின்றன. பொதுஇடங்களில் கூட பல வங்கிகள் சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு, கிரெடிட் கார்ட்கள் விநியோகிக்கப்படுகின்றன. கிரெடிட் கார்ட்கள் மூலம் கனவுகள் நிறைவேறுவதாகவும், அது ஒரு அத்தியாவசிய பொருள் என்பது போலும் முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன. வாழ்நாள் முழுவதும் இலவசம் என ஆசை வார்த்தைகளை கூறியும், பல வங்கிகள் கிரெடிட் கார்ட்களை பொதுமக்கள் தலையில் கட்டுகின்றன.

கிரெடிட் ஸ்கோர் முக்கியம்பா..!

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது, ​​கடன் பயன்பாட்டு விகிதத்தை நீங்கள் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். அதாவது, உங்கள் கிரெடிட் கார்டு வரம்பில் ஒரு மாதத்தில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள். இது கிரெடிட் ஸ்கோரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் பெற, குறைந்த கடன் பயன்பாட்டு விகிதத்தைக் கொண்டிருப்பது அல்லது 30 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பது நல்லது.

வங்கிகளின் லாப ஆதாரம்:

வங்கிகள் கிரெடிட் கார்டுகளில் பெரிய அளவில் பந்தயம் கட்டி, அதை உங்களுக்கு மேலும் மேலும் வழங்குகின்றன. ஏனென்றால் வங்கிகள் வட்டி விகிதங்கள், வருடாந்திர கட்டணங்கள், மறு வெளியீட்டு கட்டணங்கள், வணிகர் கட்டணங்கள் போன்ற வடிவங்களில் கிரெடிட் கார்டுகளிலிருந்து லாபம் ஈட்டுகின்றன. இது தவிர, கிரெடிட் கார்டு பில் சரியான நேரத்தில் செலுத்தப்படாவிட்டால், நிலுவைத் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும். சில நேரங்களில் தாமதமாக செலுத்தும் கட்டணங்களும் வட்டியுடன் சேர்க்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் பரிமாற்றக் கட்டணங்கள் வடிவில் வங்கி லாபம் ஈட்டுகிறது. இந்தியாவில் கிரெடிட் கார்டு வணிகம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஜனவரி 2025 இல் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு 10.8 சதவீதம் அதிகரித்து ரூ.1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கிரெடிட் கார்டில் வங்கி சலுகைகள்

வங்கிகள் வாடிக்கையாளர்களை வெகுமதி திட்டங்கள், கேஷ்பேக், விமான பயணத்தில் தள்ளுபடிகள், இலவச லவுஞ்ச் அணுகல் போன்ற பல்வேறு சலுகைகள் மூலம் ஈர்க்கின்றன. எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, பல நேரங்களில் மக்கள் கிரெடிட் வரலாற்றை உருவாக்க அல்லது தங்கள் கிரெடிட் ஸ்கோர் நிர்வகிக்க கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

Related Post

AI துறையில் பெருகும் வேலை வாய்ப்பு… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted by - December 14, 2024 0
இளைஞர்கள் மத்தியில் சேர்க்கை நுண்ணறிவு துறை அதிக வரவேற்பை பெற்று வருகிறது இப்போது AI இன்ஜினியரிங் துறையில் சிறந்த வேலைகள் எவை மற்றும் அதில் எவ்வளவு சம்பளம்…

கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராடினர்

Posted by - February 20, 2023 0
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன்…

இந்த பட்ஜெட் பிரதமர் மோடி எண்ணங்களுக்கு செயல் வடிவம் – முதல்வர் புகழாரம்

Posted by - February 1, 2025 0
விவசாயிகளுக்கான கிசான் கிரிடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3. இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தி கடனுதவியை அதிகரித்திருப்பது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த உதவும் – முதல்வர் ரங்கசாமி…

பைக்கில் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை- போலீசார் பாராட்டு

Posted by - July 6, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது…

ஓவியம் வரைய கற்றுத்தந்த போது 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி உதவியாளர்

Posted by - July 10, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், கஞ்சர பாலத்தை சேர்ந்தவர் கடற்படை அதிகாரி. இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *