அதிதீவிர புயலான பிபோர்ஜாய் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: 3 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

146 0

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த அதிதீவிர புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகரும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதிதீவிர புயலான பிபோர்ஜாய் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: 3  மாநிலங்களுக்கு எச்சரிக்கை | Cyclone Biparjoy To Intensify In Next 24 Hours  3 States On Alert

தற்போது இந்த புயல் கோவாவின் மேற்கு திசையில் 690 கி.மீட்டர் தூரத்திலும், மும்பையில் இருநது 640 கி.மீட்டர் மேற்கு- தென்மேற்கு திசையிலும், போர்பந்தரில் இருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் 640 கி.மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது. தற்போது 145 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகன மழை மற்றும் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல திதால் கடற்கரை முன்எச்சரிக்கை காரணமாக ஜூலை 14-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது. ஞாயிறு (நாளை) அல்லது திங்கிட்கிழமை குஜராத்தின் தெற்குபகுதியை அடைய வாய்ப்புள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளையும் துரிதமாக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுவார்கள் என சூரத் கலெக்டர் தெரிவித்துள்ளார். புயலுக்கு வங்காளதேசம் இந்த பெயரை சூட்டியுள்ளது. இதற்கு பெங்காலில் பேரழிவு என்பது பொருள். கடந்த 2020-ல் இருந்து புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகிறது.

Related Post

திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன்: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலம்

Posted by - July 6, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயல்வெளியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகார்…

நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி – நிதி அமைச்சகம் தகவல்

Posted by - September 19, 2023 0
புதுடெல்லி: மத்திய அரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2 விதமான வரிகளை வசூலித்து வருகிறது. இதில் நேரடி வரிகள் என்பதில் தனிநபர் மற்றும் கம்பெனிகள்…

அதி தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய் புயல்.. மேற்கு கடலோர மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - June 8, 2023 0
தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், மேற்கு நோக்கி நகர்ந்து…

இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம்: பிரதமர் மோடி தகவல்

Posted by - July 14, 2023 0
இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத்…

இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்..! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..

Posted by - April 5, 2023 0
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. இந்தியாவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *