”பாஜக மேலிடம் சொல்லித்தான் அண்ணாமலை பேசுகிறாரா?” கேள்விகளை அடுக்கிய ஜெயக்குமார்

129 0

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலக வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய அண்ணாமலை, மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பேசியதாகவும், பின்னர் முத்துராமலிங்க தேவர் ஆவேசம் அடைந்ததால் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து அண்ணா ஓடி வந்ததாகவும் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கத்தில் அண்ணாமலை திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

அண்ணாவை பற்றி யார் தவறாக பேசினாலும் நாக்கு அழுகிவிடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாபம் விடுத்தார்.முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை அவதூறாக பேசினால் அதிமுகவினர் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அதிமுக தலைவர்கள் எச்சரித்துள்ளனர். பின்னர், பேரறிஞர் அண்ணா சர்ச்சைக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, ” யாருக்கும் அடிபணிந்து செல்ல வேண்டிய நிலை தனக்கு இல்லை, 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை இது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை போத்தனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேர்மை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்றும் கூறி இருந்தார்.இந்த விவகாரம் அதிமுக-பாஜக இடையே பெரும் பனிப்போரை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தனித்து போட்டியிட்டால் அண்ணாமலை நோட்டாவுக்கு கீழ்தான் ஓட்டு வாங்குவார். கூட்டணியில் பாஜக இல்லை என்றால் அவர்களுக்குத்தான் இழப்பு. அதிமுகவுக்கு இழப்பு இல்லை. கூட்டணியில் பாஜக இல்லை என்றால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் சந்தோஷப்படுகிறான். பாஜக மேலிடத்தில் கூறியும் அண்ணாமலை இப்படித்தான் பேசுகிறார் என்றால், பாஜக மேலிடம் சொல்லித்தான் பேசுகிறார் என்று அர்த்தம். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டியதுபோல தலைக்கணத்துடன் ஆடுகிறார் அண்ணாமலை. காலம் வரும்போது அதிமுக மெகா கூட்டணி அமைக்கும். என்றார்.

Related Post

2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - June 2, 2023 0
 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்,…

பூனை மீசை .. சிறுநீரகத்தை காக்கும் அற்புத மூலிகை.. சிறுநீரக கற்களை நொறுக்கும் “யானை வாங்கி”.. சபாஷ்

Posted by - December 7, 2023 0
சென்னை: சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யும் மூலிகைகள் என்னென்ன தெரியுமா? அதில் ஒருசிலவற்றின் நன்மைகளை பார்ப்போம்..!! சிறுநீரகத்தில் வலி இருக்கலாம்.. கற்கள் இருக்கலாம்.. தொற்று இருக்கலாம்.. வீக்கம் இருக்கலாம்..…

உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?

Posted by - February 19, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீபநாட்களாக பொதுமக்களுக்கு இருமல்,…

ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

Posted by - December 12, 2023 0
சென்னை: ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட…

ரம்ஜான் பண்டிகை எப்போது..? தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Posted by - April 10, 2024 0
ரம்ஜான் பண்டிகை தேதி குறித்த முக்கிய அறிவிப்பை அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளதார். ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *