சிறியாநங்கை.. பல நோய்களின் எதிரி சிறியா நங்கை.. சர்க்கரை நோயாளிகளே நோட் பண்ணிக்குங்க.. சூப்பர் மூலிகை

193 0

சென்னை:

ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய மூலிகைகளில் ஒன்றுதான் சிறியாநங்கை.. ஆச்சரியத்தக்க மருத்துவ குணங்களை கொண்டது இந்த செடி.

நிலவேம்பு செடியை, சிறியாநங்கை என்று சொல்வார்கள்.. ஆனால், நிலவேம்பு செடியும், சிறியாநங்கையும் வேறு வேறு வகைகளாகும்.. நிலவேம்பு செடியை போலவே, இந்த செடியின் இலைகளும், வேர்ப்பகுதிகளும் மருத்துவ சக்தியை அடக்கி வைத்துள்ளது.

காய்ச்சல்கள்:

நிலவேம்புவை போலவே, இந்த செடியையும், விஷ காய்ச்சல்களை விரட்ட பயன்படுத்துவார்கள்.. குறிப்பாக மலேரியாவிற்கு இந்த மூலிகை மருந்தைதான் தருவார்கள்.. அதாவது ஃப்ளுகாய்ச்சல் முதல் சைனஸ், சளித்தொந்தரவு என நுரையீரல் சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு மிகப்பெரிய பலனை இந்த சிறியாநங்கை தருகிறது.சிறியாநங்கை.. பல நோய்களின் எதிரி சிறியா நங்கை.. சர்க்கரை நோயாளிகளே நோட்  பண்ணிக்குங்க.. சூப்பர் மூலிகை | Do you know Excellent Benefits of  Siriyanangai and Siriya nangai ...

பார்ப்பதற்கு வேப்பிலையை போலவே இருக்கும்.. சுவையிலும் வேப்பிலை போலவே கசப்பாக இருக்கும்.. நச்சுக்களை உடலில் சேர்க்காதவாறு இந்த சிறியாநங்கை செயல்படும்.

வேர்கள்:

அதனால்தான், அந்தக்காலத்தில் வேட்டைக்கு போகும்போது, சிறியா நங்கை செடியின் வேர்களை கைகளில் காப்பு போல கட்டிக்கொண்டு, வாயில் வேர்களை கடித்துக் கொண்டும் போவார்களாம். இதனால், மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகளில் எந்த விஷஜந்துக்கள் கடித்தாலும், உடனே இந்த இலைகளுடன் சிறிது மிளகையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், விஷக்கடிகள் இறங்கிவிடுமாம். அல்லது, இந்த செடியை பொடி செய்து ஒரு மண்டலம் அதாவது, 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பாம்பு, தேள் என எது கடித்தாலும், அவைகள் இறந்துவிடுமாம்.

ஆனால், விஷம் உடலில் ஏறும்போது, கசப்பு தெரியாது.. அதனால், கசப்பு தெரியும்வரை இந்த இலையின் விழுதை விழுங்கவேண்டுமாம்.. கசப்பு தெரிந்துவிட்டால், விஷம் இறங்கிவிட்டது என்று அர்த்தமாம். கிராமங்களில் பாம்புக்கடிக்கும், தேள்கடிக்கும், இந்த சிறியாநங்கைதான் இன்னமும் மருந்தாகி கொண்டிருக்கின்றன.

சர்க்கரை நோய்:

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு சிறியா நங்கையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் அலர்ஜி வியாதிகளைக் குணப்படுத்தும். சர்க்கரை குணமாக்கவும், இந்த இலையை மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.. இந்த இலையை காயவைத்து, பவுடராக்கி வைத்து சாப்பிட்டாலே போதும். உடலுக்கு நன்மைகள் கிடைக்குமாம்.. கல்லீரல் நோய்களை விரட்டுவதிலும், குடல் பாதுகாப்பிலும் இந்த சிறியாநங்கை சிறப்பாக செயல்படுகிறது..

கல்லீரல்:

குறிப்பாக, சிகரெட் பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் ஏற்படும் கெட்ட கழிவினை சுத்தப்படுத்த, இந்த இலையின் சாறு பேருதவி புரிகிறது. இந்த சிறியாநங்கை இலையை விழுதாக அரைத்து, அதன் சாறு மட்டும் தனியாக வடிகட்டி, அத்துடன் காய்ச்சாத பசும் பால் அல்லது மோர் சேர்த்து, வெறும் வயிற்றில், 15 நாட்களுக்கு ஒரு முறை குடித்து வந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்படும்.. நச்சுக்கள் வெளியேறும்.

நீரிழிவு நோயாளிகள்:

வெறும் வயிற்றில், இதில் ஒரு இலையை மென்று சாப்பிட்டாலே இன்சுலின் சுரப்பு உண்டாகுமாம். சிறியா நங்கை பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது என்றாலும், மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே நீரிழிவு நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நீண்ட நாட்கள் உள்ளுக்குள் எடுக்கக்கூடாது என்கிறார்கள்.. அதிலும், மண்ணீரல், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இந்த பொடியை டாக்டரின் ஆலோசனைப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டும்

Related Post

முதலில் வந்தது கோழியா…? முட்டையா..? பல ஆண்டு கால புதிருக்கு விடை தேடி கொடுத்த விஞ்ஞானிகள்

Posted by - June 16, 2023 0
உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா… சிறுவயதில் இருந்தே நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக கேட்டுக்கொண்ட கேள்விதான் இது. சில சமயங்களில் நமக்குள் எழும் இதுபோன்ற இயல்பான…

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது பெண் போக்சோவில் கைது..! நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Posted by - December 17, 2022 0
சிறுவனின் தந்தை தனது மகனை ஏமாற்றி சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாகையில் 17 வயது…

காலை 10 மணி வரை நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - December 11, 2023 0
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை, திருநெல்வேலி,…

கோவையில் பிரபலமான பெண் பேருந்து ஓட்டுநருக்கு சிக்கல்… போலீசார் வழக்குப்பதிவு

Posted by - February 7, 2024 0
கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு…

புதுவையில் 2 நாளில் ரூ.30 லட்சம் சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்

Posted by - August 12, 2023 0
புதுச்சேரி: புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர். இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *