சென்னை:
பல வியாதிகளை குணப்படுத்தும் அற்புத பழம்தான் விளாம்பழம்.. பெண்கள் இந்த பழத்தை சாப்பிடலாமா?
விளாம்பழத்தில், இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் A சத்துக்களும் நிறைந்துள்ளன.. பித்தத்தை போக்கக்கூடிய மிகச்சிறந்த பழமாக இது திகழ்கிறது.. இந்த பழத்தில், வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே, பித்த கோளாறுகள் மொத்தமும் நீங்கிவிடுமாம்.
குடல் ஆரோக்கியம்:
குடல் ஆரோக்கியத்துக்கு தாராளமாக விளாம்பழம் சாப்பிடலாம்.. குடலிலுள்ள பூச்சி புழுக்களை அழித்து வெளியேற்றக்கூடியது இந்த பழம்.. அத்துடன், வயிற்று புண், வாய்ப்புண்ணையும் ஆற்றுகிறது.. அஜீரண குறைபாடு இருந்தாலோ, பசியின்மை ஏற்பட்டாலோ, விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.
மூட்டு வலிக்கும், முழங்கால் வலிக்கும் இந்த விளாம்பழம் உதவுகிறது.. கால்சியம் நிறைந்த இந்த பழங்கள், எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதியை தருபவை.. தயிருடன் விளாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதால், எலும்புகள் பலம் பெறுமாம்.
உதிரப்போக்கு :
விளாம்பழம் சாப்பிடுவதால் ரத்தம் அதிகரிப்பதுடன், கெட்ட செல்களை அழிக்கப்பட்டு, புதிய ரத்தம் சுரக்கிறது. கண்பார்வை தெளிவுபெற உதவுகிறது இந்த பழங்கள்.. பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு விளாம்பழம் போல சிறந்த தீர்வு இருக்க முடியாது..
குழந்தைகளுக்கு இந்த பழத்தை தருவதால், அவர்களது நினைவாற்றல் அதிகரிக்க செய்யும்.. நரம்பு தளர்ச்சி இருந்தால், இந்த பழத்தை வெல்லத்துடன் கலந்து சாப்பிடலாம்.. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளாம் மரத்தின் பிசினை அடிக்கடி சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.. பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் முக சுருக்கம், வறட்சி போன்றவை போக்கக்கூடிய இந்த விளாம்பழம். அதனால்தான், இந்த பழத்தை வைத்து, குளியல் பொடி தயார் செய்யப்படுகிறது.
சதைப்பகுதிகள்:
இதற்கு, விளாம் பழத்தின் சதைப்பகுதியை தனியே எடுத்து காய வைக்க வைண்டும்.. அதனுடன் சம அளவு கஸ்துாரி மஞ்சள், பார்லி, பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு போன்றவை எல்லாம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டால், சோப்புக்கு பதிலாக உடம்பில் பூசி குளிக்கலாம். இதனால், தோல் மிருதுவாவதுடன், கரும்புள்ளிகள் மறையும். பிரசவமான பெண்கள் விளாம்பழத்தை, கூழ்போல செய்து வந்தால் உள்ளுறுப்புகள் பலம் பெறும்.
விளாம்பழத்தின் விழுது எடுத்து, அதில் பசும்பால் அல்லது மோரை கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு கழுவி வந்தால், முகம் பொலிவுபெறும்.