“பா.ஜ.கவுக்கும் எனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” – பிரதமர் மோடி

109 0

பிரதமர் மோடி

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. நேற்று பா.ம.க சேர்ந்துள்ளதால். ராமதாஸின் அனுபவ அறிவும் , அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும்” எனவும் தெரிவித்தார்.

“பா.ஜ.க வுக்கும் , தனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி கோவையில் வாகனப் பேரணி சென்றார். தொடர்ந்து இரவு கோவையில் தங்கிய அவர், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு புறப்பட்டுச் சென்றார். பாலக்காட்டில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நண்பகல் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பிற்பகல் 12.50 மணியளவில் சேலம் வந்தடைந்தார். சேலம் – நாமக்கல் புறவழிச்சாலையில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டியில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பாரத அன்னை வாழ்க .. என் தமிழ் சகோதார , சகோதரிகளே வணக்கம்.. கோட்டை மாரியம்மன் கோவில் இடத்திற்கு வந்துள்ளேன் என தமிழில் தனது உரையை தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இதற்கு முன்பு பல முறை வந்துள்ளேன். தமிழகத்தில் பா.ஜ.க வுக்கும் மோடிக்கும் கிடைத்த வரவேற்பு நாடே பார்த்தது. நான் நேற்று மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன். பா.ஜ.க வுக்கும் , மோடிக்கு கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “தமிழ்நாடு மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தமிழகம் வளர்ச்சியடைய பாஜக 400 ஜ தாண்ட வேண்டும். பாரதம் தன்னிறைவு பெற , மீனவர் பாதுகாப்பிற்கு , விவசாயிகள் வளம் பெற 400 க்கு மேல வெற்றி பெற வேண்டும்” என்று பேசினார்.

“தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. நேற்று பா.ம.க சேர்ந்துள்ளதால். ராமதாஸின் அனுபவ அறிவும் , அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும்” எனவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு மற்றும் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related Post

“அப்பா எல்லாம் வீண் விளம்பரம்” கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்

Posted by - February 19, 2025 0
பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு துரும்பைக் கூட அள்ளிப்போடாத மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரத்திற்காக அப்பா, அண்ணன் என்று நாடகம் போடுவதால் என்ன பலன்? என்று அண்ணாமலை கேள்வி…

“கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது” – நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைமை எச்சரிக்கை!

Posted by - March 16, 2023 0
 நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் திமுக பொதுக்கூட்டங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக…

நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு? அண்ணாமலையிடம் திருப்பி கேட்ட தங்கம் தென்னரசு

Posted by - March 3, 2025 0
இந்தியாவின் கடன் தொகை 55.87 லட்சம் கோடியில் இருந்து 181.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றால் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? என அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு…

அரசியலில் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

Posted by - June 10, 2024 0
அரசியலில் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது : பிரதமர்…

“அண்ணாமலையை சும்மா விடுவோமா…? – உதயநிதி ஸ்டாலின்

Posted by - April 18, 2023 0
அண்ணாமலை மீது தானும் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. DMK Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *