சிறுத்தை நடமாட்டம்… மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

95 0

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க 3 ராட்சத கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடி கொண்டிருந்தது அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, அந்த சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆரோக்கியநாதபுரம் சுற்றுவட்டாரங்களில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி, மறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல், கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய 9 பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Post

மீண்டும் ஜெயில்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

Posted by - December 15, 2023 0
திண்டுக்கல்: லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு…

புழல் ஏரியின் கரையில் உடைப்பா… தமிழக அரசு விளக்கம்

Posted by - December 7, 2023 0
புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு…

12 வயது சிறுமிக்கு வாலிபருடன் திருமணம்- முதலிரவு அறையில் இருந்து மீட்ட அதிகாரிகள்

Posted by - June 10, 2023 0
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்ட சைல்டு லைன் கண்காணிப்பாளர் அன்புச்செல்விக்கு 1098 லைல்டு லைன் தொடர்பு எண்ணில் ஒரு புகார் வந்தது. அதில் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில்…

“கேவலமா இருக்கு” டங்ஸ்டன் விவகாரம்.. இபிஎஸ்!

Posted by - December 10, 2024 0
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன்…

அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!

Posted by - December 18, 2024 0
அம்பேத்கர் பெயரை, உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தவெக தலைவர் விஜய் , மத்திய அமைச்சர் அமித்சாவைக் கண்டித்துள்ளார். அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *