தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது பரப்புரை – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

148 0

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பரப்புரையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனல் பறக்க வாக்கு சேகரித்ததனர். தமிழ்நாடு முழுவதும் அரசியல் களம் கடந்த ஓரிரு வாரம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களின் வருகையால் பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரித்து காணப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

கடைசி நாளில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டனர்.தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 76 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் களம் காண்கின்றனர். கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்களும், நாகப்பட்டினத்தில் குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை கொண்ட புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக தமிழ்வேந்தன், 19 சுயேச்சைகள் உட்பட 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Related Post

தக்காளி விலையுடன் போட்டி போடும் சின்ன வெங்காயம்- கோவையில் கிலோ ரூ.180-க்கு விற்பனை

Posted by - July 10, 2023 0
கோவை: கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட…

குளிர்காலத்துல மாரடைப்பு வர அதிக வாய்பிருக்காம்… அவை வராமல் தடுக்க ‘நீங்க’ என்ன செய்யணும் தெரியுமா?

Posted by - December 5, 2023 0
குளிர்காலம் சுற்றுப்புறத்தை உறைபனியின் அமைதியான அடுக்கில் மூடுவதுடன், உங்கள் உடலுக்கு பல சாவல்களை வழங்குகிறது. குறிப்பாக இருதய பிரச்சினைகள் உள்ளவர்கள் குளிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலம்…

விடுதலை 2 திரைபார்வை..

Posted by - December 20, 2024 0
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இருக்கும். சமூக அக்கறை மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை அழுத்தமாக பேசி வருகிறார்…

“சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது” – துணை முதலமைச்சர் #UdayanidhiStalin கண்டனம்!

Posted by - October 19, 2024 0
வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், அதன் பொன்விழா ஆண்டு நேற்று மாலை…

“நான் முதலமைச்சராக இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்” – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

Posted by - December 9, 2024 0
அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *