Voter ID இல்லையா? கவலை வேண்டாம்.. இந்த 12 ஆவண்ங்களில் ஒன்று இருந்தால் போதும்

219 0

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக,  பூத் ஸ்லிப் வழங்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை (_Election P_hoto Identity Card) பயன்படுத்தி தேர்தல்களில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPIC அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு  புத்தகம், இந்திய பாஸ்போர்ட் உட்பட 12 அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்கள்

1. ஆதார் அட்டை
2. ஓட்டுநர் உரிமம்
3. பான்கார்டு
4. ரேஷன் அட்டை
5. பாஸ்போர்ட்
6. புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
7.புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அம்டை
8. எம், எம்எல்ஏ, எம்எல்சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
9. அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ்
10. வங்கி மற்றும் அஞ்சல் பாஸ்புக்
11. மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை
12. தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு.

அதேவேளையில், தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப்பை அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக கருத முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பூத் ஸ்லிப்பில் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், வாக்குச்சாவடி விவரம்  இடம் பெற்றிருக்கும். தற்போது வாக்காளரின் புகைப்படமும் பூத் ஸ்லீப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.ஆனால், இதனை வாக்காளர் அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த ஒன்றாம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடங்கியது. இதற்காக, அரசு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.

Related Post

இனி பாதி நாளுக்கு பணம் கொடுத்தா போதும்.. 20 Vodafone திட்டங்களில் அதிரடி மாற்றம்.. ஆடிப்போன Jio, Airtel, BSNL!

Posted by - December 9, 2024 0
வோடாபோன் ஐடியா (Vodafone Idea) அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கான சேவையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. விஐ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான “ஹீரோ பேக்குகள்” (Hero…

7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.…

பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,

Posted by - December 13, 2025 0
அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது”…

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

உ.பி.யில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 4 நாளில் 57 நோயாளிகள் பலி: பின்னணி என்ன?

Posted by - June 19, 2023 0
லக்னோ : உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *