உலகளவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்ற கொட்டுக்காளி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (ஆகஸ்ட் 23) தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படம் பின்னணி இசை எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காட்சிகளின் பின்னணியில் உருவாக்கியுள்ளது. தமிழ் சினிமாவே கொண்டாடும் கொட்டுக்காளி படத்தின் சமூக வலைத்தளத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.
கூழாங்கல் படம் மூலம் தமிழ் சினிமா கவனம் ஈர்த்தவர் வினோத்ராஜ். இவரின் இயக்கத்தில் சூரி, அன்னாபென் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கொட்டுக்காளி”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். உலகளவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்ற கொட்டுக்காளி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (ஆகஸ்ட் 23) தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படம் பின்னணி இசை எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காட்சிகளின் பின்னணியில் உருவாக்கியுள்ளது. தமிழ் சினிமாவே கொண்டாடும் கொட்டுக்காளி படத்தின் சமூக வலைத்தளத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.
பிரபல இயக்குநர் பாலாஜி சக்திவேல் தெரிவிக்கும்போது, இதுதான் உலக சினிமா. இதைப் பார்த்து விட்டு திரையுலகமே ஆடிப்போகும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலக சினிமா பார்த்த திருப்தி நிச்சயம் படம் பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி கூறும்போது, “அற்புதமாக இருக்கிறது. இதை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.சினிமாவில் இருக்கும் எந்த வார்த்தையும் உபயோகிக்காமல் புதிதாக உள்ளது” என தெரிவித்தார்.இணையவாசி ஒருவர், “கொட்டுக்காளி… எங்க பகுதி மக்களின் பழக்கவழக்கம், பேச்சு, உறவுமுறை, முட்டாள்த்தனம், மூர்க்கத்தனம் என அப்படியே அந்த வாழ்க்கை திரையில் விரிந்தது” என தெரிவித்துள்ளார். மேலும், “கொட்டுக்காளி பார்த்தேன். உலகத்தரம். அதேநேரம் உள்ளூரிலும் கொண்டாடக்கூடிய படமாக, நெஞ்சென்கிற நியாயத் தராசை ஆட்டிப் பார்க்கும் படைப்பாக சிலிர்க்க வைத்திருக்கிறது. ‘கூழாங்கல்’ என்கிற முதல் படைப்பிலேயே அணுகுண்டை வீசிய தம்பி பி.எஸ்.வினோத் ராஜ், ‘கொட்டுக்காளி’யில் பேசியிருப்பது அதைவிடப் பெரிய அரசியல்” என இன்னொருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், “இப்படியொரு சூழல் தமிழ்சினிமாவில் அரிது. கமல்-ரஜினி,விஜய்-அஜீத் Clashகளைவிட நகம் கடித்து காத்திருக்கிறேன். கொட்டுக்காளியை ஏற்கனவே பார்த்துவிட்டேன். வாழையை மக்கள்திரளோடு பார்க்கப்போகிறேன். இரண்டும் தமிழ்சினிமாவின் பெருமைகளை உலகத்துக்கு பறைசாற்றட்டும்” என கூறியுள்ளார். இன்னொரு பதிவில், “ கொட்டுக்காளி அல்ல; மண்டையில் ஓங்கிக் கொட்டும் காளி” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், “கொட்டுக்காளி திரைப்படம் பார்க்கும் சூழல் அமைந்தது. தமிழ் பண்பாட்டு சூழலில் கொட்டுக்காளி திரைப்படம் ஒரு புதிய திறப்பே….மாற்று சினிமா நோக்கி தீவிரமாய் நகரும் உனது முன்னெடுப்பு ஒவ்வொன்றும் மனித மனங்களை நிச்சயம் வெல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.