ரஜினி இதெல்லாம் விட்டறலாமே.. ரசிகர்கள் கெட்டுட போறாங்க.. ஜானகி அம்மாவிடம் எம்ஜிஆர் வருத்தம்

225 0

தமிழ் சினிமாவில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் எம்.ஜி.ஆர். இவர் ரஜினியைப் பற்றி ஜானமி அம்மாவிடம் கூறிய சம்பவத்தை ரஜினி பகிர்ந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் மனைவி ஜானகி அம்மாவின் நூற்றாண்டு விழா நேற்று முன் தினம் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த விழாவில் நேரில் கலந்துகொள்ள முடியாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு வீடியோ மூலமாக ஜானகி அம்மாவுடனான தனது சந்திப்பு, அனுபவங்கள் பற்றிப் பல விசயங்களைக் கூறினார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் பேசியதாவது:

”ஜானமி அம்மாவை நான் 3 முறை சந்தித்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜானகி அம்மாவும் அரசியலில் இருந்து விலகிய காலக்கட்டத்தில், எம்ஜிஆரின் ராமாவரம் வீட்டில் அருகே தான் ஷூட்டிங் நடந்தது. அப்போது ஜானமி அம்மா என்னைச் சந்திக்க விரும்புவதாக கூறினார்கள்.

நான் நேரில் சென்று அவரைச் சந்தித்தேன். அவர் கையாலே எனக்கு காஃபி போட்டுக் கொடுத்தார்கள். அப்போது அவர், ராகவேந்திரா படம் வெளியானபோது, எம்ஜிஆர் அப்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு 15 நிமிடம் உங்களைப் பற்றித்தான் பேசினார். எப்படி ரஜினி இத்தனை அமைதியாக, சாந்தமாக, அழகாக நடித்திருக்கிறார். படம் பார்க்கவே நன்றாக இருக்கிறது.

ஆனால், ரஜினி தன் படங்களில் சிகரெட் பிடிக்கிறார். அவருக்கு ரசிகர்கள் நிறையப் பேர் இருக்கும் நிலையில், அவர்களும் அதைப் பார்த்து அப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். இதை ரஜினி விட்டுவிட்டால் நன்றாக இருக்கும் நானும் நேரம் கிடைக்கும் போது இதைப்பற்றி அவரிடம் கூற முயற்சி செய்கிறேன் என்று தன்னிடம் எம்ஜிஆர் கூறியதாக ஜானகி அம்மா என்னிடம் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் – ரஜினி இடையே கருத்து வேறுபாடு இருந்ததா?

எம்.ஜி.ஆர் சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருந்த சமயத்தில் அடுத்த தலைமுறை நடிகராக ரஜினிகாந்த், தனது நடிப்பிலு, ஸ்டைலிலும் ஒரு கரீஸ்மாவை உருவாகி, மக்களை கவர்ந்திருந்த சமயம். அப்போது ரஜினிக்கும், எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக பலரும் பலவிதமாக கூறினர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மீது எம்ஜிஆர் எத்தனை அக்கறை கொண்டிருந்தார் என்பது ரஜினியின் இந்த வீடியோவில் தெரியவந்துள்ளது.

Related Post

15 இடங்களில் சதமடித்தது… மக்கள் கடும் அவதி…!

Posted by - May 18, 2023 0
சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது. அதிகபட்சமாக வேலூர்…

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

Posted by - May 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய…

“யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும்…” – நயன்தாரா மறைமுக சாடல்

Posted by - January 11, 2025 0
தன்னம்பிக்கை நமக்கு வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும்,…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலிமனை இடங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை

Posted by - August 11, 2023 0
சென்னை: பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- காலி மனை இடங்கள் குறித்த ஆவணங்கள் சார் பதிவாளர்கள்…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *