பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

172 0

Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி மஹாராஜ் சிவாஜி முனையம் மற்றும் ஆசாத் மைதானத்தின் நெருக்கமான சந்தை பகுதிகளில், தனியாக அமைதியாக நின்று கொண்டு, சாலையில் செல்லும் யாரையும் அதிகமாக தொந்தரவு செய்யாமல் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பார்.

பிச்சை தானே எடுக்கிறார், இவரிடம் என்ன இருந்து விட போகிறது என யாரும் தவறாக நினைத்து விட வேண்டும், மும்பையில் இரண்டு பிளாட்டுகள் சொந்தமாக வைத்து இருக்கிறார், இரண்டு கடைகளை மாதம் 30,000 ரூபாய்க்கு சந்தையில் வாடகைக்கு விட்டு இருக்கிறார், பணத்தை பல நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து இலாபகரமாக மாற்றி வருகிறார்.இவருடைய சொத்து மதிப்பு மட்டு தற்போதைய மதிப்பில் 7.5 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது, இவர் ஒன்றும் அந்த அளவிற்கு பிறப்பிலேயே பணக்காரர் இல்லை, ஏழ்மையான குடும்பம் தானாம், நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் மக்கள் கூடும் இடங்களாக பார்த்து பிச்சை எடுப்பாராம், நாள் ஒன்றுக்கு ரூ 2000 முதல் ரூ 2500 வரை அதன் மூலம் வருமானம் ஈட்டுவாராம்.

மாதத்திற்கு என்று கணக்கிட்டால் ரூ 60,000 முதல் 75,000 வரை சம்பாதிப்பாராம், இவருடைய சம்பளத்தை இன்று இந்தியாவில் இருக்கும் 60% பொறியாளர்கள் கூட நெருங்க முடியாததாக இருக்கிறது, இவர் கிட்டத்தட்ட 40 வருடங்களாக பிச்சை எடுத்து வருகிறாராம், பிச்சை என்பதை ஒரு அன்பாக வேண்டுதலாக பாரத் ஜெயின் பார்ப்பதாக கூறுகிறார், இதன் மூலம் பலருக்கும் பல உதவிகளையும் செய்து வருவதாக தகவல்.

” பாரத் ஜெயின் மட்டும் அல்ல, சம்பாஜி காலே, லெட்சுமி தாஸ் உள்ளிட்ட பிச்சை காரர்களும் 1 கோடி முதல் 1.5 கோடி வரை நிகர சொத்துக்களை கொண்டு இருக்கிறார்களாம் “

Related Post

UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவா?

Posted by - April 19, 2025 0
– மத்திய நிதியமைச்சகம் மறுப்பு! 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என…

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்

Posted by - May 31, 2025 0
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசு முகக்கவச கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திய ஒரு சொல் கொரோனா.…

இந்திய பார் கவுன்சில் (BCI) AIBE 20 தேர்வு தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

Posted by - October 29, 2025 0
AIBE அறிவிப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளமான allindiabarexamination.com இல் வெளியிடப்பட்டுள்ளது . இது AIBE 2025 தேர்வு தேதி, AIBE தேர்வு அட்டவணை, AIBE கட்-ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் போன்ற அனைத்து…

வயிற்றுவலி என வந்தவருக்கு திடீர் பிரசவம்: சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் அதிர்ச்சி

Posted by - July 13, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு…

அவங்க தான் காரணம்.. ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சாமியார்!

Posted by - May 2, 2023 0
அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *