களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!

208 0

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை விஜய் நேரில் சந்தித்துள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க.வும், தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் களமிறங்கியுள்ளன. இதில், வரும் தேர்தலில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய அளவில் சவால் அளிக்கும் கட்சியாக அ.தி.மு.க. மட்டுமின்றி தவெக-வும் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையம்:

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல திட்டங்களை மக்களுக்காக அமல்படுத்தியிருந்தாலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆகியவை பின்னடைவாக உள்ளது. குறிப்பாக, பரந்தூர் விமான நிலைய விவகாரம் தி.மு.க. அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் அமைய உள்ள இந்த புதிய விமான நிலையம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், வளத்தூர், பொடவூர், நெல்வோய், தண்டலம், மடப்புரம், தோடூர், சிங்கிலிபாடி, குணகாரப்பாக்கம், இடையர்பாக்கம், அக்கமபுரம், ஏகானபுரம், மகாதேவி மங்கலம் ஆகிய 13 கிராமங்கள் முழுவதும் அரசால் கையகப்படுத்தப்பட உள்ளது.

தொடர் போராட்டம்:

இதனால், இந்த கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவித்து வருகின்றனர். அரசு தங்கள் வாழ்விடங்களுக்கும், வேலைக்கும் மாற்று ஏற்பாடுகளை வழங்குவதாக உத்தரவாதம் அளித்தாலும், 3 மடங்கு இழப்பீடு தொகை வழங்குவதாக கூறினாலும் தங்கள் பூர்வீக இடங்களை விட்டுச் செல்ல பலரும் மறுத்து வருகின்றனர். இதனால், பல மாதங்களாக இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், இந்த விவகாரத்தில் மக்கள் தொடர்ந்து போராடி வருவதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஆகியோர் ஏற்கனவே சந்தித்திருந்தனர்.

களத்தில் விஜய்:

இந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதியதாக களமிறங்கியுள்ள விஜய் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை இன்று சந்தித்துள்ளார்.. இதனால், பரந்தூர் விமான நிலைய விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பரந்தூர் விமான நிலைய விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தவெக மட்டுமின்றி பிற எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு அழுத்தம் தர திட்டமிட்டுள்ளனர்.

Related Post

அரசியலிலும் சாதிக்க வேண்டுமென விஜய்க்கு மாணவி அழைப்பு…

Posted by - June 17, 2023 0
#BREAKING | மேடையிலேயே விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த மாணவி மாணவியின் அழைப்பை கடைசி வரை கவனமுடன் கேட்டுக்கொண்ட விஜய் சென்னை, நீலாங்கரையில் மாணவ – மாணவிகளுக்கு…

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

Posted by - March 21, 2023 0
ஓசூர்: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.…

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

Posted by - October 8, 2024 0
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில்…

டாக்டர்.ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் இடியும் நிலையில் கட்டிடங்கள்- ஆசிரியர் தினம் கொண்டாடும் நிலையில் அவலம்

Posted by - September 4, 2023 0
ராணிப்பேட்டை: முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற…

“ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” – அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை

Posted by - January 2, 2025 0
“பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.” மதுரை முக்குலத்தோர் இலவச…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *