அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி

60 0

கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

ADMK: கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

செங்கோட்டையன் அதிருப்தி

கோவை அன்னூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ”அத்திக்கடவு அவினாசி திட்டதக்குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படாததால் அதில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர  2011ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப்பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்களே மேடையில் இல்லை” என செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பான அழைப்பிதழில் கூட,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் மீண்டும் விரிசலா?

கோவை அன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிலையில், கட்சி சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால், அத்திக்கடவு – அவினாசி திட்டம் அமைய உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இன்னும் ஓராண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செங்கோட்டையன் கருத்தால் அதிமுகவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழச்செய்துள்ளது.

 

Related Post

அதிமுக ஆட்சியை விமர்சிக்க பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி வேண்டும் : பழனிசாமி ஆவேசம்!

Posted by - December 3, 2022 0
  அதிமுக ஆட்சியை விமர்சிக்க தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை என கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக…

அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? – அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!

Posted by - December 20, 2024 0
 “மதத்தின் பெயரால் அரசியல் செய்யலாம்” என்கிறார் அமித் ஷா. மதத்துக்கு எதிராக அம்பேத்கரின் கருத்துக்கள் அமைந்திருப்பதால் அவரை இழிவு செய்கிறார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். அம்பேத்கரை அவமதித்த…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு…!

Posted by - May 26, 2023 0
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

கவுன்சிலர் டூ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்… யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

Posted by - July 6, 2024 0
தலித் மக்களின் குரலாக திகழ்ந்தவர், ஒட்டுமொத்த சென்னையே பேசும் அளவுக்கு வளர்ந்துள்ள ஆம்ஸ்ட்ராங் யார்? சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான ஆம்ஸ்ட்ராங், பள்ளிக் காலம்…

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - November 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *