“பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள்”..ஆனால் இப்போ பாருங்க.!…இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!

80 0

அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என கூறியிருந்த நிலையில், இன்று அதிமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார், அண்ணாமலை

பாஜகவால் தோற்றோம் , பாஜக நோட்டா கட்சி என கூறியவர்கள் எல்லாம், தற்போது கூட்டணிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக அதிமுகவை விமர்சித்திருக்கிறார்.

அதிமுக-பாஜக கூட்டணி 

தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் , சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு , எங்களுக்கு ஒரே எதிரி திமுக என இபிஎஸ் பதிலளித்தார்.

இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பேசியதாவது, திமுக கட்சிதான் எங்களுக்கு ஒரே எதிரி.  திமுகவிற்கு எதிராக இருப்பவர்கள், எங்களுக்கு நண்பர்கள். அதிமுக தலைமையிலான ,எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை ஏற்றுக் கொள்ளும் அனைவரையும் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

அண்ணாமலை அதிமுக மீது தாக்குதல்:

மேலும், இரு தினங்களுக்கு முன்பு அண்ணமலை தெரிவிக்கையில், “ அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என தெரிவித்தார். இந்நிலையில், அதிமுக பாஜக செயல்பாடுகள், அதிமுக-பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திடீரென இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை காட்டமாக மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.

இன்று அண்ணாமலை பேசியதாவது , “ பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டார் கட்சி என்றும் மற்றும் பாஜகவால்தான் தோற்றோம் என்று கூறியவர்கள் , இன்று எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி கொண்டே இருக்கிறது.

அதிமுகவை சிறுமைப்படுத்தும் அண்ணாமலை:

இக்கட்டான் சூழ்நிலையில் வந்தவர் தினகரன். பாஜக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும்.

மேலும், இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் தலைமையில்தான் கூட்டணி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயக்குமார் தெரிவித்த நிலையில்,  பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுகவை சிறுமைப்படுத்தும் விதமாக , அண்ணாமலை  திடீரென பேச வேண்டிய சூழல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன, அதிமுக – பாஜக கூட்டணி முயற்சி எதிரான போக்கிற்கு சென்றுவிட்டதா என்றும் கேள்வியை எழுப்பியிருக்கிறது, அண்ணாமலையி பேச்சு.

அதிமுக எதிர்வினை:

இந்த தருணத்தில், அதிமுக கட்சியை மறைமுகமாக  , பாஜக கூட்டணிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பேசப்பட்டதாக கூறப்படும் நிலையில் , அதிமுக என்ன சொல்ல போகிறது என்று எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

மேலும், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அண்ணாமலைதான் தடையாக இருப்பதாக பாஜகவினரின் சிலர் கூறி வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுக சிறுமைப்படுத்திய பேசிய பேச்சானது, அதிமுக கட்சியினர் மட்டுமன்றி பாஜகவினர் சிலரிடையே கசப்பான போக்கையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Related Post

திமுகவுக்கு ஆதரவு… ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு! ஷாக்காகி பார்த்த விஜய்

Posted by - November 6, 2025 0
நமது தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே எங்கள் தலைவர், உங்களுக்கு நன்றிக்கடன் இல்லையா என்று…

ரிமோட்டால் டிவியை அடித்தது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்

Posted by - March 25, 2024 0
இண்டியா கூட்டணியை ஆதரித்து மார்ச் 29-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில், மக்கள் நீதி மய்யம்…

நெல்லையில் ராகுல்… மதுரையில் அமித்ஷா… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் தேசிய கட்சி தலைவர்கள்..!

Posted by - April 12, 2024 0
இரவு 7 மணிக்கு செட்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி கூட்டாக பரப்புரை தமிழ்நாட்டில் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மத்திய அமைச்சர்…

ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

Posted by - August 12, 2025 0
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.…

சட்டப்பேரவை சர்ச்சை : அடுக்கடுக்கான விமர்சனங்கள்… ஆளுநர் தரப்பு கொடுத்த விளக்கம்..!

Posted by - January 9, 2023 0
Governor RN ravi | தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரை குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது. அரசாங்கத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *