அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?

21 0

அதிமுக வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் உரையாடி வருகிறார்

திருச்சி அதிமுகவினர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது எனவும் இதுதான் கடைசி எச்சரிக்கை எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதிமுக வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் உரையாடி வருகிறார்.

அதிமுக நிர்வாக ரீதியாக 82 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இபிஎஸ் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, கட்சி நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் தேர்தல் அறிவுரைகள் குறித்தும் உரையாடி வருகிறார். அதோடு கட்சியினர் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது திருச்சி நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். அப்போது பேசிய அவர், “திருச்சி அதிமுக நிர்வாகிகள் உள்ளூர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது.    திமுகவினருடன் தொடர்பில் இருக்கலாம் என்பதை உடனடியாக மறந்து விடுங்கள். ஜெயலலிதா இருந்தபோது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இனியும் திமுகவினருடன் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு கடைசி எச்சரிக்கை.” எனத் தெரிவித்தார்.

அதுவரை அமைதியாக பேசிக்கொண்டிருந்த இபிஎஸ் திருச்சி பெயரை கேட்டதும் டென்ஷன் ஆகிவிட்டார்.

”அதிமுகவுக்கு நிர்வாகிகள் உழைக்க வேண்டும். திமுகவினரோடு தொடர்பில் இருப்பதை நிறுத்த வேண்டும். திருச்சி மீண்டும் அதிமுகவின் கோட்டையாக மாற வேண்டும். ஏனென்றால் அங்கு 2011, 2016 தேர்தலில் அவ்வளவு தொகுதிகள் வென்று காட்டியுள்ளோம்.

தற்போது திமுகவினரோடு கைகோர்த்து இருப்பதால் அதிமுக முறையாக செயல்படவில்லை என தெரிகிறது. இதுதான் கடைசி எச்சரிக்கை.

அதிமுகவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. பூத் கமிட்டி வேலை எப்படி போகிறது. எவ்வலவு உறுப்பினர்களை சேர்த்துள்ளீர்கள். இளைஞர்களை அதிகப்படியாக சேர்க்கும் வழியை பாருங்கள். அப்போதுதான் 2026ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேசிய திருச்சி அதிமுக நிர்வாகிகள், நாங்கள் சிறப்பாக செயலாற்றி அதிமுகவை 2026ல் வெற்றி பெற வைப்போம் என உறுதியளித்தனர்.

Related Post

”அறம் எங்கே வெல்லும்…” – வைரலாகும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் ட்வீட்

Posted by - January 24, 2023 0
அதற்கேற்ப காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். சினிமா, அரசியல், பிக்பாஸ் என நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாக…

அதிமுக ஆட்சியை விமர்சிக்க பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி வேண்டும் : பழனிசாமி ஆவேசம்!

Posted by - December 3, 2022 0
  அதிமுக ஆட்சியை விமர்சிக்க தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை என கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக…

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி… இணைந்தது ஏன் என்றும் விளக்கம்

Posted by - February 24, 2024 0
டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்த விஜயதரணி பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்…

குற்றங்களை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Posted by - February 10, 2025 0
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகவும், பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது…

போதை வணிகத்தை எதிர்த்து நான் போராடுவேன்! – நெல்லையில் பிரதமர் மோடி ஆவேசம்!

Posted by - April 16, 2024 0
இதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜி20 உள்ளிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *