காதலன்தான் எல்லாம் என்ற மாயையில் வாழ்வை இழக்கும் சிறுமிகள்- ஆண் நண்பர்கள் இல்லாததை அவமானமாக கருதும் அவலம் …

85 0

காதல்…

18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று தவறாக நினைத்து அவர்கள் வெகுதூரம் செல்கிறார்கள். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக 12 வயது முதல் 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியேறி திரு மணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது அவர்களுக்கு ஆபத்தாக முடிந்து விடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு குடும்பத்தில் சரியான ஆதரவு கிடைக்காதது காரணமாக உள்ளது.

படிக்கும் வயதில் காதல் மயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில்தான் வீட்டை விட்டு ஓடிப்போகும் எண்ணம் வேரூன்றத் தொடங்குகிறது.

சமூக ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களின் தாக்கத்தால் காதல் அவர்களுக்கு எதையும் விட பெரிதாக தெரிகிறது.

அந்த நேரத்தில் இளம்பெண்கள் தங்கள் காதலன் தான் தங்களுக்கு எல்லாமே என்ற மாயையில் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

தாங்கள் விரும்பும் இளைஞனை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பயமும் தங்கள் குடும்பத்தினர் தங்களைப் பற்றி அறிந்தால் மீண்டும் அவரைச் சந்திக்க விடமாட்டார்கள் என்ற பயமும் அவர்களை மிகவும் விரக்தியடையச் செய்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் காதலனுடன் ஓடிய மாணவிகள் பலர் வாழ்க்கையை இழந்துள்ளனர். இதில் ஏராளமானோர் மீண்டும் தங்களுடைய பெற்றோரை நாடி வருகிறார்கள்.

இளமைப் பருவத்தில் குழந்தைகளின் மனதின் ஆழத்தை நாம் தொடர்ந்து ஆராய வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகள் எல்லா விஷயங்களையும் பற்றி தங்களிடம் வெளிப்படையாகப் பேச ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோரின் ஆதரவு இல்லாதபோதுதான் குழந்தைகள் அந்நியர்களுடன் நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

படிப்பில் கவனம் செலுத்தி தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு நல்ல வருமானம் மற்றும் வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்வதன் மூலம் அவர்கள் கடினமாக உழைத்து சாதிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளலாம். இந்த வகையான சிந்தனையை சிறுமிகளிடம் விதைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

Related Post

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Posted by - March 11, 2024 0
ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆரம்பத்தில் UPI மூலமாக…

2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து.. 15 பேர் உயிரிழப்பு

Posted by - October 24, 2023 0
வங்காளதேசத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள்…

ஏழ்மையிலும் விடா முயற்சி- வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ்…

முதலீட்டாளர்களே மாதத்தின் கடைசி நாளில் கவனிக்க வேண்டிய பங்குகள்..

Posted by - July 31, 2024 0
இந்திய பங்குச்சந்தைகளின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்&எம்,…

பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ இளைஞர்! ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம்

Posted by - December 9, 2024 0
பதினோராம் வகுப்பு படித்துவந்த மாணவியை ஒருதலையாய் காதலித்த நபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருக்கிறார். ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், நந்திகொட்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *