சிங்கப்பெண்ணில் அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்.. நிற்கதியான ஆனந்தி, காப்பாற்ற போகும் அந்த நபர்

15 0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷை கொலை செய்ய வேண்டும் என்ற அரவிந்தின் திட்டம் செல்லுபடி ஆகவில்லை.அன்பு மகேசை காப்பாற்றி விட்டான் என்றாலும் அதற்கு அடுத்து நடந்த விஷயம் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்

பாதி மயக்கத்தில் இருக்கும் மகேஷ் நடக்கும் அனைத்தையும் கவனித்திருப்பான், அன்புவை புரிந்து கொள்வான் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஷ் கண் விழித்ததும் போலீஸ்காரர்களிடம் அன்பு தான் என்னை ஆளை வைத்து கொல்ல முயற்சி செய்தது என்று வாக்குமூலம் கொடுக்கிறான்.

இந்த விஷயம் ஆனந்திக்கு பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்துகிறது. மகேஷிடம் போய் நியாயம் கேட்கப் போகிறேன் என்று போகும் ஆனந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள்.மகேஷ் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின் படி அன்பு கைதாக கூட வாய்ப்பு இருக்கிறது. அன்பு கைதானால் ஆனந்தி மற்றும் அவனுடைய அம்மா லலிதாவின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பது பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மகேஷ் உண்மையை தெரிந்து கொண்டு அன்பு இல்லாமல் அரவிந்த் மற்றும் மித்ரா வேறு என்ன திட்டம் போடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள கூட இப்படி ஒரு வாக்குமூலத்தை கொடுத்து இருக்கலாம்.

அன்புவை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற மகேஷ் ஒருத்தனால் மட்டும் தான் முடியும். மகேஷ் உண்மையை தெரிந்து கொண்டு அன்பு வை காப்பாற்றுகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Post

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் ….

Posted by - May 16, 2023 0
யூடியூபர் இர்ஃபானின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பிரபல ரெஸ்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டு ரிவியூ செய்து பிரபலமானவர் இர்ஃபான். உணவுகளை இவர் ரிவியூ செய்யும் விதம்…

பூரிக்கு உருளைக்கிழக்கு இல்லாமலே ருசியான மசாலா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க…

Posted by - September 13, 2023 0
உங்கள் வீட்டில் அடிக்கடி பூரி செய்வீர்களா? பூரிக்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கைக் கொண்டு தான் மசாலா செய்வீர்களா? ஆனால் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொண்டால், அதனால் வாய்வு தொல்லையால் அவதிப்படக்கூடும்.…

திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?

Posted by - April 21, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று…

கோட்டைகாலத்திற்கு ஏற்ற குளு குளு பானம் எது தெரியுமா ?

Posted by - April 18, 2024 0
நன்னாரி சர்பத் செய்முறை மற்றும் அதன் பயன்கள் குறித்த செய்தித் தொகுப்பு. கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பருகப்படும் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதனீர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *