இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!

26 0

இதற்கு முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இனிமேல் அதுபோல நடக்காது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் கருத்தரங்க கூட்டம் கோவையில் இன்று நடந்தது. சரவணம்பட்டியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் பேசியதாவது,

ஆட்சிக்கு வந்து என்ன செய்யப்போறோம்?

கோவைனாலும் கொங்கு பகுதினாலும் இந்த மண்ணோட, மக்களோட மரியாதைதான் முதல் ஞாபகத்திற்கு வரும். இந்த பூத் லெவல் ஏஜெண்ட் பயிற்சி பட்டறை. பேருதான் பயிற்சி பட்டறை. இந்த கூட்டம் அப்படினாலே ஓட்டு சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஓட்டுக்காக மட்டுமே நடக்குற சந்திப்பு கிடையாது. என்னடா இவர் இப்படி பேசிட்டாருனு நீங்க நினைக்கலாம். நாம தேர்தல் அரசியல் களத்துலதானே இருக்குறோம்.

ஆட்சி, அதிகாரம்னாலே அது ஓட்டு சம்பந்தப்பட்டது. ஆனால், நாம ஆட்சிக்கு வந்து என்ன செய்யப்போகிறோம்? இது வரை பண்ணது மாதிரி எல்லாம் நாம பண்ணப்போறது இல்லை. நாம ஆட்சிக்கு வரனும்னு நினைக்குறதே மக்களுக்காகத்தான். மக்களோட நலனுக்காகத்தான்.

இனிமே அதெல்லாம் நடக்காது:

பூத் லெவல் ஏஜெண்ட் பயிற்சிப் பட்டறையில மக்கள்கிட்ட இருந்து எப்படி நாம ஓட்டு வாங்கப்போறோம்? அப்படினு மட்டும் பேசப்போகுற பயிற்சிப் பட்டறை கிடையாது. மக்களோட நாம எப்படி ஒன்றிணையப் போறோம்னு ஆலோசிக்கத்தான் இந்த பயிற்சி பட்டறை.

இதுக்கு முன்னாடி நிறைய பேரு வந்துருக்கலாம். போயிருக்கலாம். பொய் சொல்லிருக்கலாம். மக்களை ஏமாத்திருக்கலாம். இதெல்லாம் பண்ணி ஆட்சியை பிடிச்சு இருக்கலாம். அதுக்கெல்லாம் நான் வரல. இனிமேல் அதெல்லாம் நடக்காது. நடக்கவிடப் போறதும் கிடையாது.

களம் ரெடியா இருக்குது:

நம்ம கட்சி மேல பெரிய நம்பிக்கையை கொண்டு வரப்போறதே தேர்தல் களப்பணியில பூத் லெவல் ஏஜெண்ட்சான நீங்கள்தான். நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போர் வீரனுக்கும் சமம். நாம ஏன் வந்திருக்கோம்? எதுக்கு வந்திருக்கோம்? எப்படிப்பட்ட ஒரு ஆட்சியை அமைக்கப்போறோம்? அப்படிங்குறதை மக்கள்கிட்ட கொண்டு போய் சொல்லுங்க.

கண்டிப்பா கேப்பாங்க. உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கு?னு கேப்பாங்க. ஆனா நீங்க யாரு? நீங்க எப்படிப்பட்டவங்க? உங்க கேபாசிட்டி எப்படினு எனக்குத் தெரியும். நம்மகிட்ட என்ன இல்ல. மனசுல நேர்மை இருக்குது. கறைபடியாத அரசியல் பண்ணனும்னு நம்பிக்கை இருக்கு. லட்சியம் இருக்கு. உண்மை இருக்கு. செயல்பட திறமை இருக்குது. அர்ப்பணிப்பு குணம் இருக்குது. களம் ரெடியா இருக்குது. இதுக்கு மேல என்ன வேணும். போய் கலக்குங்க. வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பின்பு, நடிகர் விஜய் மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து பூத் கமிட்டி ஏஜெண்ட்களுக்கான பயிற்சி பட்டறையில் தானும் பங்கேற்றார். நடிகர் விஜய் கோவை வந்திருப்பதை அறிந்த தவெக தொண்டர்கள் மட்டுமின்றி அவரது ரசிகர்கள், பொதுமக்கள் அவரை காண குவிந்தனர்.

சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Related Post

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

Posted by - April 19, 2023 0
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

அதிகாலை வந்த பரபர அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை!

Posted by - December 25, 2023 0
சென்னை: கிறிஸ்துமஸ் நாளான இன்று அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை…

மாஃபியா அராஜகம்..! தப்பை தட்டிக் கேட்டால் கொலையா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அரசு வேடிக்கை?

Posted by - February 15, 2025 0
மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் மாணவன் உட்பட இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தை தட்டிக் கேட்டால் கொலை செய்யும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

குடவாசல் அருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்… வருவாய்த்துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல்…!!

Posted by - January 20, 2024 0
திருவாரூர் அருகே குடவாசல் பேருந்து நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வருவாய்த்துறை, காவல்துறை பிடுங்கியதால் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திருவாரூர்…

2023ல் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட சினிமா கலைஞர்கள்.. கண் கலங்க வைத்த மயில்சாமி, குணசேகரன்

Posted by - December 16, 2023 0
இந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் நிறைய நல்ல கலைஞர்களை நாம் இழந்திருக்கிறோம். ஒவ்வொரு மரணமும், தங்கள் வீட்டிலேயே நடந்தது போல் மக்கள் கதறி அழுத…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *