கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா – சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?

18 0

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அது என்ன தெரியுமா.?

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரங்களை காணலாம்.

கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் என்ன.?

இந்திய அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தமிழ்நாடு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்கி வருகிறது.

தற்போது பரவிவரும் புதுவகை வைரஸ், வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருந்தாலும், அதனால் பாதிப்புகள் குறைவுதான் என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என ஏற்கனவே தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி, பொது இடங்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,364 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் 2 பேரும், கர்நாடகா மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவரும் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலால் 5,364 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், 4,724 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, கேரளாவில் 1,679 பேரும், குஜராத்தில் 615 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, இதுவரை 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் தற்போது, NB1.8.1, LF.7 ஆகிய புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தியுள்ள உலக சுகாதார அமைப்பு, இந்த வகை கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

Related Post

ஷவர்மா விற்பனை செய்யும் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன?: அதிகாரி விளக்கம்

Posted by - September 21, 2023 0
கோவை: நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை…

14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Posted by - June 20, 2023 0
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – சமாதானம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 28, 2024 0
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சமாதானமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

15 இடங்களில் சதமடித்தது… மக்கள் கடும் அவதி…!

Posted by - May 18, 2023 0
சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது. அதிகபட்சமாக வேலூர்…

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் வரும் 17ஆம் தேதி முற்றுகை போராட்டம் – அண்ணாமலை

Posted by - March 14, 2025 0
தமிழக முதலமைச்சரே பதவி விலக வேண்டிய அளவிற்கு டாஸ்மாக் நிறுவன உழல் மிகப்பெரியது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி டாஸ்மாக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *