ஏறிய வேகத்துல பாதாளத்துக்கு போயாச்சு.. ZOHO Arattai

153 0

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய வேகத்தில் ஜோஹோ அரட்டை ஆப் (ZOHO Arattai App) ஆனது பர்சனல் சாட் மற்றும் குரூப் சாட் ஆகியவற்றுக்கு இ2இஇ (e2ee) என்னும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் (end to end encrypted) பாதுகாப்பை கொடுத்துள்ளது.

ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை ஆப் ஆனது வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக களமிறங்கியது. உள்நாட்டின் தயாரிப்பாக இருந்ததால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரையில் அதை டவுன்லோட் செய்தது மட்டுமல்லாமல், அரட்டை ஆப் மீதான ஆதரவை தெரியப்படுத்தினர்.இந்த ஆதரவால் கடந்த செப்டம்பர் நடுப்பகுதியில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் 3,000 ஆக இருந்த புதிய சைன்-அப்கள் (Sign-Ups) அக்டோபர் தொடக்கத்தில் 1.5 லட்சமாக மாறியது. கிட்டத்தட்ட 100 மடங்கு வளர்ச்சியை கொடுத்தது. ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டது. அரட்டை ஆப் ஆனது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் என்கிற தனியுரிமை அம்சத்தை கொண்டிருக்கவில்லை. இதனாலேயே இந்த வீழ்ச்சியை பார்த்துள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், அப்படி ஏதும் கிடையாது என்பதை ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) நேரடியாக எக்ஸ் தளம் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். அனைத்து பர்சனல் சாட்களுக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் இருக்கிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான குரூப் சாட்களுக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் கொடுக்கப்பட இருக்கிறது என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். ஆகவே, அரட்டை ஆப் ஆனது தனியுரிமை பாதுகாப்பை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த இ2இஇ பாதுகாப்பில் இரண்டு ஆப்ஷன்களை அரட்டை ஆப் ஆனது கொண்டிருக்கிறது.

Related Post

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி

Posted by - February 23, 2023 0
ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு…

தங்கப் புதையலை சென்னையில் விற்று உல்லாசமாக வாழ்ந்த 3 பேர் கைது- 499 தங்க நாணயங்கள், ரூ.14 லட்சம் பறிமுதல்

Posted by - August 28, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சித்தே பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித், அமரன், வருண் இவர்கள் கடந்த மே மாதம் அதே கிராமத்தில் உள்ள மலை…

இந்த ஆண்டில் 4 கிரகண நிகழ்வுகள்… இந்தியாவில் காண முடியுமா?

Posted by - January 5, 2024 0
இந்தூர்: சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே…

சீனா, அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அவசர ஆலோசனையில் இந்தியா?

Posted by - December 21, 2022 0
Coronavirus | இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அனைத்து…

நாகலாந்தில் நிலச்சரிவு: ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் சுக்குநூறாக நசுங்கிய கார்கள்- வைரலாகும் வீடியோ

Posted by - July 5, 2023 0
நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *