“விஜய் வேடிக்கை மட்டும் பார்த்தால் எப்படி?”

110 0

புதுச்சேரி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்? அதனால் தவெக தலைவர் விஜய் நியாயப்படி, மக்கள் உணர்வுபடி பேச வேண்டும்” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

முருகப் பக்தர்கள் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் தீபப் போராட்டம் மற்றும் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் திருப்பரங்குன்றம் முருகனை சீண்டுவதையே தன்னுடைய வேலையாக கடந்த 2 வருடங்களாக திமுக அரசு வைத்திருக்கிறது.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடக்கிறது. நான் பேச மாட்டேன், வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள். தவறு எது, சரி எது என்பதை கூற வேண்டும். நடுவில் நின்றால் எப்படி? அதனால் தவெக தலைவர் விஜய் நியாயப்படி, மக்கள் உணர்வுபடி பேச வேண்டும்.

பாஜகவைச் சேர்ந்த சிறுபான்மையின அமைச்சருக்கு இலாகா கொடுக்கவில்லை என்று புதுச்சேரியில் பேசிய விஜய், திருப்பரங்குனறம் விவகாரத்தில் பெரும்பான்மை மக்கள் பற்றி ஏன் பேசவில்லை?

தமிழக முதல்வர் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோற்றார். கட்சி ஆரம்பித்த பிறகு எத்தனை முறை திமுக தோற்றுள்ளது. வரலாறு காணாத தோல்வியை 2014-ல் சந்தித்தனர். 234 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே வென்றனர். ஆகவே, தோல்வியை பற்றி ஸ்டாலின் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.சபரிமலை தீர்ப்பும், திருப்பரங்குன்றம் தீர்ப்பும் ஒன்றில்லை. இருக்கும் நடைமுறையை மாற்றியதற்காக சபரிமலை தீர்ப்பை எதிர்த்தோம். இருக்கும் நடைமுறையை பின்பற்றவே திருப்பரங்குன்றம் தீர்ப்பை ஆதரித்தோம். ஆகவே, திருமாவளவன் தீர்ப்பு நகலை படிக்க வேண்டும். தீர்ப்புகள் தவறாக சொல்லும்போது எதிர்க்கின்றோம், சரியாக வரும்போது ஆதரிக்கின்றோம்” என்று அண்ணாமலை கூறினார்.

Related Post

கரூர் துயர சம்பவம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்..

Posted by - October 13, 2025 0
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார்.…

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - September 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலைதிமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?

Posted by - January 17, 2026 0
சட்டமன்ற தேர்தலுக்கான சில முக்கியமான வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். அப்படி என்ன சொன்னார்.?…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *