தனியார் சேனல்களில் கட்டண உயர்வு.. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

211 0

தனியார் சேனல்களின் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனியார் சேனல்களின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), தனியார் செயற்கைக்கோள் சேனல்கள், கட்டண சேனல்கள் தங்களது கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.இதனால், மார்ச் மாதம் முதல், கேபிள் டிவி மாதக் கட்டணம் சுமார், 300 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக உயர வாய்ப்பு இருக்கிறது.

இதனைக் கண்டித்தும் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன்படி, திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், நெல்லை, சேலம், காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் மாதத்திற்குள் கட்டணத்தை  குறைக்காவிட்டால், ஒருநாள் முழுவதும் அனைத்து கட்டண சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்தி, அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும்’ என்று சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்ததனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசுகையில், “உழைக்கும் மக்களின் பொழுதுப்போக்கு சாதனமாக விளங்கும் கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயலாகும். பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் கட்டண சேனல்கள், பார்வையாளர்களின் மாதாந்திர கட்டணத்தை உயர்த்துவது அதிகபட்ச அநியாயம்.” என்றனர்.

Related Post

கும்பகோணத்தில்: தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த பிள்ளைகள்

Posted by - November 23, 2022 0
மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். தனக்கு 80 வயதை எட்டி…

அமோனியா வாயு கசிவு விவகாரம்… அறிக்கை வெளியிட்ட நிறுவனம்

Posted by - December 27, 2023 0
சென்னை: சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

சந்தி சிரிக்கும் சட்ட-ஒழுங்கு? கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பாரா ஸ்டாலின்? வெயிட்டிங்கில் எதிர்க்கட்சிகள்

Posted by - April 28, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட-ஒழுங்கு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்க பதில் அளிக்க உள்ளதால், சட்டசபையில் இன்று அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறை…

ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

Posted by - February 18, 2025 0
ஆசிரியர் பணி நியமனத்திற்கு இனி ”காவல்துறை சரிபார்ப்பு சான்று” கட்டாயமாக்கப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்…

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 2, 2025 0
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். “கல்வி கொடுக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *