ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

195 0

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.Fire Isolated Over Black Background Stock Photo - Download Image Now - Fire  - Natural Phenomenon, Flame, Black Background - iStock

தகவலின்பேரில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில் தொழிற்சாலையில் இருந்து ரூ.10 கோடி பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், தீ விபத்தில் உருக்குலைந்த ஊதுவத்தி கம்பெனியில் வேலூர் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஜேம்ஸ் அந்தோணிராஜ், ஓய்வுபெற்ற தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அதில், வானில் இருந்து நெருப்பு பிழம்பாக வந்த எரிகற்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதை உறுதி செய்தனர். மேலும், அந்த கம்பெனியில் இருந்து எரிகற்கள் சிலவற்றையும் மீட்டனர்.

இவற்றை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்கள் கூறும்போது, ”வானில் இருந்து எரி கல் தீப்பிழம்பாக எரிந்து வந்து விழுந்தை சுற்று வட்டார பகுதியில் இருந்த சிலர் பார்த்துள்ளனர்.

அவர்களின் நேரடி சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளோம். சுமார் 3 கி.மீ சுற்றுவட்டாரத்தில் எரிகற்கள் விழுந்த தாக்கம் தெரிந்துள்ளது. மேலும், விபத்து ஏற்பட்ட தொழிற்ச்சாலையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எரி கற்களை மீட்டுள்ளோம். முதற்கட்ட ஆய்வில் அவை எரி கல் என்று உறுதியானாலும், அவற்றை முறையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

இதற்காக, சேகரிக்கப்பட்ட எரிகற்களை சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளோம். நாட்றம்பள்ளி அருகே ஏற்கெனவே இரண்டு முறை எரிகற்கள் விழுந்துள்ளன. தனியார் கல்லூரியில் விழுந்த எரிகற்களால் பயங்கர சேதம் ஏற்பட்டது. கல்லூரி வாகனங்கள், கண்ணாடிகள் நொறுங்கின. ஊழியர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் எரி கல் விழுந்துள்ளது. தற்போது 3-வது முறையாக எரி கற்கள் விழுந்துள்ளது என்றனர்.

Related Post

அறிவித்தபடி நடைபெறுமா மாநாடு? #TVK -வினருக்கு போலீசார் மீண்டும் நோட்டீஸ்!

Posted by - October 16, 2024 0
தவெகவின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் வழங்கினர்.   தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27ம்தேதி மாலை…

ஏங்க முருகன் உங்க கனவுல வந்து மாநாடு நடத்த சொன்னாரா..? – சீமான் விளாசல்..!!

Posted by - August 13, 2024 0
உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா அல்லது சீமானுக்கு பயந்து நடத்துகிறீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை…

திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5 ஜி சேவை தொடக்கம் – 134 நகரங்களில் 5 ஜி அளித்து சாதனை

Posted by - January 19, 2023 0
Jio 5G in Tiruppur : ஜியோ 5ஜி தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை…

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

Posted by - February 28, 2023 0
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார். தமிழ்நாட்டில்…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *