உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

216 0

இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னை காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், பணம் முறைகேடு செய்த கல்லால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. லைக்கா நிறுவனம் தனது புகார் மனுவில் 114.27 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை கல்லால் குழுமம்  மோசடி செய்ததாக தெரிவித்திருந்தது. ஆனால், அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் மோசடி பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடியாக இருக்கும் என்று தெரியவந்தது.

மேலும், தொடர்ந்து நடத்திய விசாரணையில்  பல்வேறு சட்ட விரோத சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் (Suspicious Cash and Hawala Transaction) கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மேல் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, விசாரணையின் ஒரு பகுதியாக  கடந்த 25.05.2023 அன்று, குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.25 கோடி சந்தை மதிப்புள்ள அசையா சொத்துக்களை தற்காலிகமாக அமலாக்கத் துறை முடங்கியுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் ரூபாய்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.விசாரணையின் போது, கல்லால் நிறுவனத்திடம் இருந்து உதயநிதி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related Post

அதிமுக பொதுச் செயலாளராகிறார் ஈபிஎஸ் – பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - March 28, 2023 0
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம்…

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை வெட்டிக் கொல்ல காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாணவி

Posted by - August 29, 2023 0
தேனி: தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபாலபாண்டியன் (வயது 55) பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு…

சரணடையும் நாளிலேயே ஜாமினை பரிசீலிக்க வேண்டும் – திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மனுவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted by - January 25, 2024 0
சரணடையும் நாளில் இருந்து ஜாமின் வழங்க பரிசீலிக்க வேண்டும் என எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன், மருமகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.…

எண்ணூர் அருகே வாயுக்கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல்: அச்சத்தால் கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்

Posted by - December 27, 2023 0
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில்…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *