பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

207 0

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள் நட்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் தன் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இருந்த போதும் வழக்கறிஞர் செந்தில்குமார் அந்தப் பெண்ணுடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் இளங்கோவன், வழக்கறிஞரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி, திருப்பூர் பகுதியை சேர்ந்த தேவி என்ற பெண்ணின் மூலம் வழக்கறிஞர் செந்தில் குமாரை தொடர்பு கொண்டு என் வழக்கு ஒன்று நீங்கள் வாதாட வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனை நம்பிய வழக்கறிஞர் செந்தில் குமார் சேலம் வரும்படி கூறியுள்ளார். பின்னர் சேலம் வந்த அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு குரும்பபட்டி வன உயிரில் பூங்கா சென்றனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் கோரிமேடு பகுதியில் உள்ள பச்சியம்மன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளனர்.வழக்கறிஞர் செந்தில்குமார்

அப்போது அந்தப் பெண், தன் வழக்கு சம்பந்தமான டாகுமெண்டுகளை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளும்படி கூறி கோரிமேடு அருகே உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்கனவே அவரை பின் தொடர்ந்து வந்த மதுரையை சேர்ந்த இளங்கோவன் மற்றும் அவரது கூட்டாளிகள் வழக்கறிஞரை குண்டு கட்டாக காரில் தூக்கி சரமாரியாக தாக்கியப்படியே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அப்போது அங்கிருந்த காவல்துறை வாகனம், அந்த கடத்தல் வாகனத்தை பின் தொடர்ந்து காரில் சிக்கிக் கொண்டிருந்த வழக்கறிஞர் செந்தில்குமாரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடத்தலில் ஈடுபட்டவர்களில் காரில் இருந்த இளங்கோவன் மட்டுமே போலீஸ் பிடியில் சிக்கினார். மேலும் உடன் வந்த நபர்களும் அந்த பெண்ணும் அங்கிருந்து மாயமாகியுள்ளார். இது தொடர்பாக கன்னங்குறிச்சி காவல் நிலையம் மற்றும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Post

தமிழக முதல்வர் – ட்ரெண்டிங் ஹாஸ்டாக்குடன் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்..!!

Posted by - March 1, 2024 0
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரிலும்,தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்கள்…

புதிய தலைமுறை முடக்கம் | ”ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்” – தலைவர்கள் கண்டனம்! #StandWithPT

Posted by - October 7, 2025 0
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். புதிய…

கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் – விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Posted by - March 6, 2025 0
பிரதமர் மோடி தொடர்பாக இணைதளம் வெளியிட்ட கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி…

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் – அண்ணாமலை காட்டம்

Posted by - February 23, 2024 0
  தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை…

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 2, 2025 0
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். “கல்வி கொடுக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *