2023ல் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட சினிமா கலைஞர்கள்.. கண் கலங்க வைத்த மயில்சாமி, குணசேகரன்

339 0

இந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் நிறைய நல்ல கலைஞர்களை நாம் இழந்திருக்கிறோம். ஒவ்வொரு மரணமும், தங்கள் வீட்டிலேயே நடந்தது போல் மக்கள் கதறி அழுத அளவிற்கு, நல்ல குணம் கொண்ட நடிகர்கள் இந்த வருடம் இறந்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

இந்த வருடம் உயிரிழந்த கலைஞர்கள்

மனோபாலா: இயக்குனர், குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் மனோபாலா. இவர் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி மரணம் அடைந்தார். கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த மனோபாலா உயிரிழந்து விட்டதாக அவருடைய குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

வாணி ஜெயராம்: சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். இவர் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி உயிரிழந்தார். அவருடைய வீட்டில் தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் பாடகி வாணி ஜெயராம்.

கே.விஸ்வநாத்: கே விஸ்வநாத் இந்திய சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக இருந்தார். யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தாத்தாவாக இவர் நடித்திருப்பார். கமலஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்திலும் அவருக்கு மாமனாராக நடித்திருந்த இவர் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி உயிரிழந்தார்.

ஆர் எஸ் சிவாஜி: நடிகர் மற்றும் இயக்குனர் சந்தான பாரதியின் அண்ணன் தான் ஆர் எஸ் சிவாஜி. கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவருடைய நடிப்பு குறிப்பிடத்தக்கது. கமலஹாசனின் நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார். அந்த செப்டம்பர் இரண்டாம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

டி பி கஜேந்திரன்: இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் தான் டிபி கஜேந்திரன். காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர், 15 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உயிரிழந்தார்.

எதிர்நீச்சல் மாரிமுத்து: சீரியல் என்பது பெண்களுக்கானது என்ற இலக்கணத்தை மாற்றியவர் தான் எதிர்நீச்சல் சீரியலில் கலக்கிய மாரிமுத்து. இவர் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மரணம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போல் மக்கள் கண்கலங்கினார்கள்.

ராமதாஸ்: இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்ட கலைஞர் தான் இ ராமதாஸ். இவர் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த விட்டதாக அவருடைய குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டது.

நெல்லை தங்கராஜ்: நெல்லை தங்கராஜ் என்பவர் தெருக்கூத்து கலைஞராக இருந்தவர். இயக்குனர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தில் கதையின் நாயகன் கதிருக்கு அப்பா கேரக்டரில் நடித்திருப்பார். இவர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.

சரத்பாபு: ஒரு காலகட்டத்தில் கமல் மற்றும் ரஜினி இணையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் சரத்பாபு. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பொழுதே இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி சரத்பாபு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

Related Post

மாணவிகள், இளம்பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து வீடியோ பதிவு செய்த பாதிரியார்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

Posted by - March 16, 2023 0
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அடுத்த பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.   இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். கடந்த…

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Posted by - October 15, 2024 0
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகள் கூடாரமா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! கொதிக்கும் ஈபிஎஸ்

Posted by - December 26, 2024 0
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ். தமிழ்நாட்டின் பெருமைமிகு…

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு

Posted by - December 25, 2023 0
பிரதமர் மோடியின் அறிவுரையின்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடி வருகிறார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம்…

ஒரு வயது குழந்தைக்கு அரிய வகை நோய்: சிகிச்சை செலவுக்காக ரூ.17½ கோடி உதவியை நாடும் பெற்றோர்

Posted by - July 29, 2023 0
சென்னை: சென்னை சேலையூரில் வசித்து வருபவர் ஆகாஷ் மிஸ்ரா. ஐ.டி. நிறுவன ஊழியரான இவருக்கு ஒரு வயதில் சிவான்ஷி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *