பூசணிக்காயுடன் இந்த 5 பொருட்களை அரைத்து ஜூஸ் போடுங்க! வெறும் வயிற்றில் குடிங்க.. அப்புறம் பாருங்க

246 0

சென்னை:

வெண் பூசணி சாறை காலை வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். அந்த ஜூஸை எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா?

நீர் சத்து இருக்கும் காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பார்கள், அதிலும் குறிப்பாக வெயில் காலங்களில் இந்த நீர் சத்துள்ள பதார்த்தங்களையும் பழங்களையும் எடுத்துக் கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.இந்த நீர் சத்து காய்கறிகளான வெண் பூசணிக்காய், சுரக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், சௌ சௌ, வெள்ளரிகாய் உள்ளிட்ட காய்களில் வெள்ளரியை தவிர்த்து மற்ற காய்களை சில வீடுகளில் சமைப்பது கூட இல்லை.பூசணிக்காயுடன் இந்த 5 பொருட்களை அரைத்து ஜூஸ் போடுங்க! வெறும் வயிற்றில்  குடிங்க.. அப்புறம் பாருங்க | Do you know the health benefits of Ash Gourd  Juice? - Tamil Oneindia

அப்படியிருக்கும் போது எப்படி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்? ஆனால் எந்த காய்கறிகளையும் தவிர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள், மூதாதையர்களின் அறிவுரையாக இருக்கிறது. அந்த வகையில் வெண் பூசணிக்காய் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது. சிறுநீர்ப்பையின் செயல்பாடுகளை ஊக்குவித்தது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இருமல், சளி போன்றவைகளுக்கும் இது அருமருந்தாகிறது. வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை சரி செய்கிறது. இந்த பூசணிக்காய் பார்ப்பதற்குத்தான் மிகவும் பெரிதாக இருக்கும்.

ஆனால் இதில் கலோரிகள் மிகவும் குறைவு. ஆனால் நீர்ச்சத்து அதிகம். இதனால் இது எடை குறைப்பில் அதிக பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளையும் வெளியேற்றும். நீர் சத்து அதிகம் இருப்பதால் அடிக்கடி பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். உடல் சூட்டை தணிக்கும். வயிற்றுக்கு இதமானது. அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்கள் ஏற்படாமல் தடுக்கும். பூசணிக்காயில் கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. மேலும் தியாமின், ரிபோஃபிளேவின் போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த பூசணிக்காய் உடல் சோர்வை போக்கும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரி செய்யும்.

கெட்ட பாக்டீரியாக்களை அழித்து குடலை சுத்தமாக வைத்திருக்கிறது. இந்த பூசணிக்காயில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கார்டிசோல் உற்பத்தியை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையை நீக்கும். மனம் பதற்றம் போன்ற பிரச்சினைகளை குறைத்து மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. பெண்களுக்கு அதிக வெள்ளைப்படுதலையும் குறைக்கும்.

இதற்காக ஒரு ஜூஸ் தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

வெள்ளை பூசணி- தோல் நீக்கியது

இஞ்சி- ஒரு சிறிய துண்டு

பூண்டு- 5 பல் உரித்தது

உப்பு – சிறிதளவு

எலுமிச்சை பழச்சாறு- சிறிதளவு

புதினா இலைகள்- 10

இவற்றை எல்லாம் சேர்த்து அரைத்து வடிக்கட்டி உப்பு சேர்த்தும் எலுமிச்சை சாறும் கரைத்து அந்த ஜூஸை குடித்து வர வேண்டும்.

Related Post

திமுக, அதிமுகவை விட அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தவெக! மணி வார்த்தை பொய் ஆகுமா?

Posted by - October 7, 2024 0
திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளைவிட புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் இருப்பதாக பிரபல ஜர்னலிஸ்ட் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில்  தளபதி விஜயின் வருகை…

எல்லாம் பணத்திமிரு, அடுத்தவங்க கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா.. நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

Posted by - April 1, 2025 0
சமீப காலமாக அடுக்கடுக்காக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் யூடியூபர் இர்ஃபான். பாட்டியின் மீது கார் மோதியதில் தொடங்கி அவருக்கு குழந்தை பிறந்தது வரை எல்லாமே பஞ்சாயத்து தான்.ஆனால்…

சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted by - June 18, 2023 0
சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய், சினிமாவை…

3வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு- 4 கட்டுமான நிறுவனம், வீடுகளில் 7½ கிலோ தங்கம் பறிமுதல்

Posted by - February 16, 2023 0
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நேற்று முன்தினம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும்…

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு திடீர் சிக்கல்

Posted by - February 20, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரியானா, குஜராத்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *