திருப்பதிக்கு போறீங்களா? 99 சதவீதம் பேர் செய்யும் தவறு! பெருமாளே சொல்லியும் பாலோ செய்யாத பக்தர்கள்

152 0

திருப்பதி:

திருப்பதியில் 99 சதவீத பக்தர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். அது போல் பண்டிகை காலங்கள், பிரம்மோற்சவம் , விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி தரிசிக்க வரும் பக்தர்கள் எந்த மாதிரியான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானே கூறியுள்ளாராம். அவர் சொன்ன விதிகளை 99 சதவீதம் பக்தர்கள் கடைப்பிடிப்பதில்லை.திருப்பதிக்கு போறீங்களா? 99 சதவீதம் பேர் செய்யும் தவறு! பெருமாளே சொல்லியும்  பாலோ செய்யாத பக்தர்கள் | What are the steps to worship Tirupati  Venkatachalapathy temple ...

திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் எந்த மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* முதலில் வராஹ சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.

* பிறகு ஸ்ரீனிவாச பெருமாள் என்னை தரிசிக்க வேண்டும் என விதிகளை வகுத்தார். ஆனால் 90 சதவீதம் பக்தர்கள் கோயிலின் புராணம் தெரியாமல் நேரடியாக ஸ்ரீவாரியை தரிசனம் செய்ய சென்றுவிடுகிறார்கள்.

* புஷ்கரணியில் குளிக்காவிட்டாலும் முகம், கை, கால்களை அலம்பிக் கொண்டு தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு வராஹ சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும். ஸ்ரீவெங்கடேஸ்வர சாமியை தரிசனம் செய்யச் சென்றால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

அது போல் சிலர் சொல்வது என்னவென்றால் கோவிந்த ராஜ பெருமாளை தரிசித்துவிட்டு அலமேல் மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரையும் தரிசிக்க வேண்டும். அது போல் வராகமூர்த்தியையும் தரிசனம் செய்ய வேண்டும். பிறகு நேராக மேல் திருப்பதி வந்து புஷ்கரணியில் நீராடிவிட்டு ஸ்ரீவாரியை தரிசிக்க வேண்டும் என்கிறார்கள். திருப்பதி கலியுக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இதனால் இங்கு வைத்த கோரிக்கை உடனடியாக நிறைவேறும் என்பது ஐதீகம். ஏழு கடல், ஏழு மலைகளை தாண்டிதான் ஏழுமலையானை தரிசனம் செய்கிறோம் என சொல்வதுண்டு. முதலில் பெருமாளின் பாதங்களை தரிசிக்க வேண்டும். பின்னர் கீழிருந்து மேலாக செல்ல வேண்டும் .

அப்போது மார்பில் இருக்கும் மகாலட்சுியை தரிசனம் செய்ய தவறக் கூடாது. இதன் பிறகுதான் அவரது முகத்தை தரிசனம் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் திருப்பதி செல்லும் போது கடைப்பிடியுங்கள். அது போல் திருப்பதியில் வரிசையில் நிற்கும் போது கோவிந்த நாமத்தை சொல்லிக் கொண்டே செல்ல வேண்டுமே தவிர ஊர் கதை, உறவு கதையெல்லாம் பேசிக் கொண்டு செல்லக் கூடாது.

Related Post

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை… இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 3, 2023 0
புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு…

பெங்களூரு பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.97ஆயிரம் மோசடி: மும்பை கும்பல் துணிகரம்

Posted by - September 4, 2023 0
பெங்களூரு: பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசில் ஒரு…

ஆசிரியரை சீரழித்த மாணவி.. 7 ஆண்டுகளுக்குப்பின் வெளியான பின்னணி.. கேரளாவில் பரபரப்பு…

Posted by - April 19, 2025 0
கேரளாவில், பாலியல் குற்றச்சாட்டால், ஒரு ஆசிரியரின் வாழ்க்கை சீரழிந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப்பின் நடந்த அந்த சம்பவத்தால் அவரது வாழ்க்கையே மாறியிருக்கிறது. அந்த சுவாரஸ்ய நிகழ்வு என்ன…

இன்று லாபமழை பொழியப்போகும் டாப் 5 பங்குகள் இவைதான்.. நிபுணர்கள் பரிந்துரைப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

Posted by - August 23, 2024 0
பங்குச் சந்தையின் கடைசி நாளான இன்று சில பங்குகள் சந்தை இயக்கச் சக்திகளால் லாபத்தை கொடுக்கும். இல்லையெனில் முந்தைய நாள் அதிக லாபத்தை பதிவு செய்து, இன்று…

406 வாழை மரங்களை வெட்டி சாய்த்த மின்வாரிய அதிகாரிகள்… அதிர்ச்சியில் விவசாயிகள்!

Posted by - August 8, 2023 0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வாரப்பெட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். இவர் கடந்த 50 ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்துவருகிறார். வரும் ஓணம் பண்டிகைக்கு நல்ல விலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *