பிக் பாஸ் பைனல்
நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
விஷ்ணு, மாயா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் மணி என ஐந்து பைனலிஸ்ட் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.
டைட்டில் வின்னர்
மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார் விஜே அர்ச்சனா என்ற தகவல் கசிந்துள்ளது. இதன்மூலம் அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

கடந்த சில வாரங்களாகவே அர்ச்சனாவிற்கு அதிக வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மக்களிடம் இருந்து அனைவரையும் விட அதிக வரவேற்பை பெற்ற அர்ச்சனா தற்போது பிக் பாஸ் 7 டைட்டில் ஆக போகிறார் என தெரிகிறது.
ஆனால் நிகழ்ச்சி நடத்தும் சேனலின் மீது கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சியின் ரசிகர்கள் மக்களின் ஓட்டு மற்றும் கருத்துகளுக்கு நிகழ்ச்சி குழு மதிக்கவில்லை மழையால் எலிமினேசன் இல்லை என கூறி நிக்சனை காப்பாற்றினார்கள்,விசித்திரா எலிமினேசன் மாயாவை காப்பாற்ற சேனலின் சதி என்று கூறிவருகின்றனர்.இதனால் சேனல் இறுதி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லி வெற்றி பெற்றவர்களை மாற்றி அறிவிக்க வாய்ப்பிருப்பதாக புலம்பி வருகின்றனர்.
நாளை என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.