`திருட்டுப்போன பைக்கை ஓட்டி வந்த போலீஸ்’ – தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்த விவசாயி

178 0

“திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது. போலீஸ் என்பதால் பயந்துபோன நான், பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை.”

ஒரு வருடத்துக்கு முன்பு காணாமல்போன பைக்கை, ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாகக் கூறி அபராதம் கட்ட வலியுறுத்தி, போலீஸிடமிருந்து விருத்தாசலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு வந்த மெசேஜ் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருட்டுப்போன பைக்கை, போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவதாகக் கூறி அந்த விவசாயி தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள வேட்டைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (40) என்ற விவசாயி. இவர் கடந்த 2018-ல் டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கை வாங்கி ஓட்டிவந்திருக்கிறார். சிவப்பு நிறம்கொண்ட அந்த பைக்கின் பதிவு எண் டி.என்.91, டி.1143. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு, டிசம்பர் 10-ம் தேதி இரவு சாவடிக் குப்பத்திலுள்ள தன் சகோதரர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு, இரவு அங்கேயே தங்கியிருக்கிறார். இதையடுத்து மறுநாள் காலை பார்த்தபோது அவருடைய பைக்கைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல் தனது பைக் திருட்டுப்போனதாகக் கூறி, விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரும் வழக்கு பதிவுசெய்து ரசீது கொடுத்ததுடன்,

விசாரணையை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் வெற்றிவேலின் செல்போனுக்கு ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் சென்றதற்காக ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என நாகப்பட்டினம் போலீஸிடமிருந்து வந்த மெசேஜ் வெற்றிவேலுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து வெற்றிவேல், தன் நண்பர்களுடன் சேர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் தனது பைக்கைத் தேடியிருக்கிறார்.அந்த நிலையில், போலீஸ் ஒருவர் தன் பைக்கைப் பயன்படுத்திவருவது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தனது பைக்கைத் திருடியவர்கள் மீதும், தன் பைக்கைப் பயன்படுத்திவந்த போலீஸ் மீதும் நடவடிக்கை எடுத்து, தன் பைக்கை மீட்டுத் தர வேண்டும் என தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி கயல்விழியிடம் அவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து வெற்றிவேல் கூறியதாவது, “ஒரு வருடத்துக்கு முன்பு காணாமல்போன பைக்கை ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாகக் கூறி, அபராதம் செலுத்த வலியுறுத்தி போலீஸிடமிருந்து மெசேஜ் வந்தது. இதைத் தொடர்ந்து திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் சுரேஷ் என்பவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது.போலீஸ் என்பதால் பயந்துபோன நான், என் பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை. இதையடுத்து திருட்டுப்போன எனது பைக்கை உடனே மீட்டுத்தர வேண்டும். திருடிச் சென்றவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருட்டு வாகனத்தைப் பயன்படுத்திய போலீஸ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எனது பைக்கை போலீஸ் பயன்படுத்திவரும் போட்டோ ஆதாரத்துடன் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Related Post

காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - August 24, 2023 0
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வருகிற 29-ந்தேதி வரை கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Posted by - November 23, 2022 0
பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி…

திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

Posted by - July 11, 2023 0
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற…

கோகுல் ராஜ் கொலை வழக்கில் மீண்டும் பிறழ்சாட்சி சொன்ன சுவாதி.. கடைசி வாய்ப்பு கொடுத்த நீதிபதி

Posted by - November 26, 2022 0
மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? – நீதிபதி கேள்வி கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று ஆஜரான…

ஆளுநரை சந்தித்த விஜய்! கைதான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் பரபரப்பு

Posted by - December 30, 2024 0
பொதுமக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை வழங்கிய தவெக கட்சியினர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *