லூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மெயின் பஜார் வீதியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான அரிநாராயணன், சரவணன், அசோக்குமார், அருண்குமார் ஆகிய நால்வரும் தங்கள் வீட்டுப் பெண்களுடன் வேலூர் எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், ‘‘எங்கள் தந்தையும், எங்கள் சித்தப்பாவும் கூட்டாகச் சேர்ந்து 22-03-1994 அன்று ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தனர். அந்த நிலத்தை இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள்தான் அனுபவித்துவருகிறோம். இதுவரை எந்த இடையூறும் இருந்ததில்லை. இந்த நிலையில், தி.மு.க-வின் அணைக்கட்டு மத்திய ஒன்றியச் செயலாளரான ஏரிபுதூர் வெங்கடேசன், எங்களுக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஆக்கிரமித்து, மண் அள்ளி விற்பனைச் செய்கிறார். இதுபற்றி கேட்டதற்கு எங்கள் குடும்பத்தினரை அடித்து தாக்கினார்; கொலை மிரட்டல் விடுத்தார். எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு வெங்கடேசன்தான் முழுக்க முழுக்கக் காரணம்’’ எனக் கூறியிருந்தனர்.இதுபற்றி தி.மு.க ஒன்றியச் செயலாளர் வெங்கடேசனிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘அந்தக் குடும்பத்தினர் இத்தனை ஆண்டுகாலமாக பயன்படுத்திவந்த அந்த நிலம், என்னுடைய பூர்வீக நிலம். என் பெரியப்பாவிற்குச் சொந்தமானது. அவர் சற்று மனநிலைப் பாதிக்கப்பட்டவர். 1993-ம் ஆண்டிலேயே அவரது வாரிசுகளான எங்கள் பெயர்களில், அந்த நிலத்தை ‘உயில்’ எழுதி வைத்துவிட்டார். அதேசமயம், எங்கள் வீட்டு பெரியவர்களுக்குத் தெரியாமலேயே திருட்டுத்தனமாக எதிர்த்தரப்பினர்தான் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அந்த உயில் மாயமாகியிருந்தது. சமீபத்தில் எங்கள் பழைய வீட்டை இடித்தபோது தான் அந்த ஆவணம் சிக்கியது. அதேபோல, எதிர்த்தரப்பினரை நான் தாக்கவுமில்லை; கொலை மிரட்டல் விடுக்கவுமில்லை; என் மீது பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக அவர்களை எதிர்கொள்வேன்’’ என்றார்.
Related Post
நடைபயிற்சி சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்
நடைப்பயிற்சி சென்ற பெண் பேராசிரியரை தாக்கி, அவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள…
நிலக்கரி எடுக்க எழுந்த எதிர்ப்பு… டெல்டாவில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது தெரியுமா?
பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை…
நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
உடுமலை: நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்…
தஞ்சையில் மோதல்: பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதியதால் பரபரப்பு..
இரண்டு பேருந்திற்க்கும் இடையே யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு பேருந்துகளை இயக்குவதில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பேருந்து…
“கட்சி தொடங்கும் முன்பே தலைவர், பொதுச் செயலாளர் தேர்வா?! தரமாக கலக்கும் தலைவர் விஜய்!”
தளபதி விஜய் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் அரசியல் கட்சி அமைப்பது…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (463)
- உலகம் (170)
- சினிமா (809)
- தமிழ்நாடு (1,078)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (234)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (83)
Recent Posts
- இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் – டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு?

- பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!

- தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

- ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!

- ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
