இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

194 0

அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் தொகை திட்டம் என்ற பெயரில் அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு முதல் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்திருந்தாலும், அந்த மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை  வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்  அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தில் இனி மாதம்தோறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்க இருப்பது மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை  மாநில,மத்திய அரசாங்கங்கள் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியாகும் நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே அதற்கு முன்பாக அறிவிப்பை வெளியிடும் வகையில் ராமாமிர்தம் அம்மையார் உதவித் தொகை புதுமைப் பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பெண்களின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில் இதுவரை 2லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வந்தனர். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பாணை அமலுக்கு வந்தால் மேலும் அதிக கல்லூரி மாணவிகள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

“அரசியலில் குதிக்கும் முன்பே குளறுபடி…டென்ஷனில் தளபதி விஜய்..”

Posted by - October 28, 2023 0
தளபதி விஜய் சமீபமாகவே அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்…விரைவில் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது…அவரே ஹிண்ட்ஸ் கொடுத்ததும் இருந்தார்…

தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted by - April 17, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர்…

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்!

Posted by - November 23, 2023 0
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார். கேரள மாநிலம் பத்தினம்திட்ட பகுதியை சேர்ந்த பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார்.…

நிலக்கரி எடுக்க எழுந்த எதிர்ப்பு… டெல்டாவில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை…

”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு

Posted by - December 7, 2024 0
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி” தான் விஜய் என திமுக அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். Minister SekarBabu: வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *