தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

139 0

காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்காக முன்வைக்கப்படும் அரசியல் முழக்கமே திராவிட மாடல் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன் என விளக்கமளித்து ஆங்கில நாளிதலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்துள்ளார்.

திமுக அரசு உடனான அனுபவம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், கோவை கார் குண்டு வெடிப்பு, கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே, பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்ததாகவும், தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று எப்படி கூற முடியும் என்றும் வினவியுள்ளார்.மேலும், திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது என்றும், ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல் வாசகம். சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடல் என்ற முழக்கம் என்றும் கூறியுள்ளார்.

இதன்காரணமாகவே, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை நீக்கிவிட்டு வாசித்ததாகக் கூறினார். தனது உரைக்கு பிறகு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்ததாகவும், ஆனால், சபாநாயகருடன் ரகசியமாக பேசி முதலமைச்சர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து பாதியில் வெளியேறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக சித்தா பல்கலைக்கழக மசோதா உள்ளதாகவும், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்பதால், அந்த மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

மேலும், ஆளுநர் மாளிகையில் நிதி செலவினங்களில் விதிமீறல் இல்லை என்றும், முதலமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் நல்ல மரியாதையை வைத்துள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்ரவி கூறியுள்ளார்.

Related Post

சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

Posted by - December 13, 2023 0
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை…

மகளிர் உரிமை தொகை ரூ.1000 இன்னும் வரலியா?அப்ளை பண்ணிட்டீங்களா? மெசேஜ் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்

Posted by - September 23, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகையில் இன்னொரு சிறப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, பெரும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம்…

இந்த அறிகுறிகள் இருந்தா… உங்க கல்லீரல் செயலிழக்க வாய்ப்பு உள்ளதாம்…அது கல்லீரல் புற்றுநோயாவும் மாறுமாம்!

Posted by - November 9, 2023 0
அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் கொழுப்பு கல்லீரல் நோயும் ஒன்று. இந்த பிரச்சனை சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், அது உயிருக்கு ஆபத்தான…

சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100 நாடுகள் பங்கேற்பு

Posted by - August 21, 2023 0
சென்னை: பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.…

ரூ. 2000 கோடியை முதலீடு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின்.. எதில் தெரியுமா

Posted by - January 18, 2023 0
இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *