தமிழக முதலமைச்சரிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்… மதுரையில் திடீர் பரபரப்பு

139 0

கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு கொடுக்க பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்தார். உடனே அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி மற்றும் பேரக்குழந்தையுடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரைக்கு சென்றார். இந்த நிலையில் முதல்வரின் தனிப்பட்ட ஓய்வு பயணம் என்பதால் கட்சி நிர்வாகிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

தொடர்ந்து, முதல்வர் மதுரை விமான நிலையம் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு கொடுக்க பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்தார். உடனே அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை பிடித்து  அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.கஞ்சாவுடன் முதலமைச்சரிடம் மனு அளிக்க முற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த மனுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் போதை மற்றும் கஞ்சா பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் வயது பேதமின்றி பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தை போதை பழக்க வழக்கத்தில் இருந்து காத்திட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் அவரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்ல முற்பட்ட முதல்வரை கஞ்சாவுடன் சந்திக்க வந்த நபரால் மதுரை விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஏற்பட்டது.

Related Post

வெப்பநிலை இயல்பைவிட மேலும் அதிகரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - February 26, 2024 0
தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை,…

கைகள், தோள்பட்டை, கால்களுக்கு வலிமை தரும் அர்த்த பூர்வோத்தானாசனம்

Posted by - March 10, 2023 0
அர்த்த பூர்வோத்தானாசனம் என்னும் இந்த ஆசனத்தின் வடமொழி பெயரில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பூர்வ’ என்றால் ‘கிழக்கு’, ‘உத்’ என்றால் ‘தீவிரம்’ (intense), ‘தான்’ என்றால் ‘நீட்டுவது’…

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி… ஓபிஎஸ் அறிவிப்பு

Posted by - January 21, 2023 0
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்…

மீனுடன் “இதை” சாப்பிடாதீங்க.. முள்ளங்கியுடன் சேர்க்க கூடாத பொருள் இதுதான்.. கீரை + தயிர் = விஷம்

Posted by - December 2, 2023 0
சென்னை: மீன்கள் பல நன்மைகளை நமக்கு தந்தாலும், எந்தெந்த பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா? 2 வேறு உணவுப்பொருட்கள் ஒரே குணத்தை பெற்றிருந்தால், அவை…

மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளை: திருட்டு பெண் படம் அனுப்பி போலீசார் தேடுதல் வேட்டை- கை, கால்களை உடையுங்கள் என ஆடியோ

Posted by - August 14, 2023 0
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி செங்கம் மேலப்பாளையம் திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து பெண் ஒருவர் காரில் வந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *