கல்லீரலை வலுவாக்கும் விதை.. தலைமுடி வளர்ச்சி முதல் சரும நலன் வரை காக்கும் ஒரே விதை.. நாலஞ்சு போதும்

141 0

சென்னை:

பப்பாளி எந்த அளவுக்கு நமக்கு நன்மைகளை தருகிறதோ, அதைவிட அதிகமான நன்மைகளை தரக்கூடியதுதான், பப்பாளி விதைகள். கல்லீரலின் பாதுகாப்புக்கு இந்த பப்பாளி விதைகள் பேருதவி புரிகின்றன. பப்பாளி விதைகளில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன.. பழத்தை சாப்பிடும்போது, இந்த விதைகளை தூக்கி போட்டுவிடாமல், கழுவி காயவைத்து பவுடராக்கி எடுத்து கொண்டால், பல்வேறு வகைகளில், பல்வேறு உடல்நலம் சார்ந்த கோளாறுகளை தீர்க்க பயன்படுத்தலாம். குறிப்பாக, கால் ஸ்பூன் முதல் ஒரு ஸ்பூன் அளவு மட்டுமே இந்த விதைகளை பயன்படுத்த வேண்டும்.கல்லீரலை வலுவாக்கும் விதை.. தலைமுடி வளர்ச்சி முதல் சரும நலன் வரை காக்கும்  ஒரே விதை.. நாலஞ்சு போதும் | Do you know the excellent benefits of Papaya  Seeds and amazing uses ...

சத்துக்கள்:

இந்த பப்பாளி விதைகளில் பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டானின்கள், சபோனின்கள் போன்ற ஏகப்பட்ட ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் நிறைந்துள்ளன. இவைகள் எல்லாம் சேர்ந்துதான், நச்சுக்களை கொன்று, நம்முடைய உடலில் நோய்கள் எதுவும் அண்டாமல் காக்கின்றன.. பப்பாளி விதையிலுள்ள மூலக்கூறுகள் பூஞ்சை, பாரசைட்டுகள், ஈஸ்ட் போன்ற நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை.

எனவே, பெண்களுக்கு இந்த பப்பாளி விதைகள் வரப்பிரசாதம் எனலாம்.. மாதவிடாயை தூண்டவும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை நீக்கவும் இந்த விதைகள் உதவுகின்றன.. பீட்டா கரோட்டின் இந்த விதையில் நிறைந்திருப்பதால், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் உற்பத்தியை சீராக்குகிறது.

பெண்கள்:

அடிவயிற்று பிரச்சனை, வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இப்படி வயிறு சம்மந்தப்பட்ட அத்தனை தொந்தரவுகளுக்கும் பப்பாளி தீர்வாக உள்ளது… அதனால்தான், பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும் என்பார்கள்.. இந்த விதையில் இருக்கும் ஒலியிக் அமிலம், மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்பு உறிஞ்சப்படுவதை தடுக்கின்றன.. இதனால், உடல் பருமன் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது

பெரும்பாலும், கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாக உபயோகப்படுகிறது.. ஆனால், கல்லீரலில் உள்ள நச்சுக்களையும், கிருமிகளையும் அழிக்க, பப்பாளியைவிட, அதன் விதைகளே சிறந்தது.. கல்லீரல் சிரோசிஸ் போன்ற நோய்களை அண்டாதவாறு இந்த விதைகள் பணிபுரிகின்றன. கல்லீரலின் வலிமையை அதிகரிக்க செய்ய வேண்டுமானால், பப்பாளி விதைகளை பயன்படுத்தலாம்.

எப்படி சாப்பிடலாம்:

கல்லீரலை சுத்தம் செய்ய, பப்பாளி விதைகளை, சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது நான்கைந்து விதைகளை நசுக்கி, எலுமிச்சம் பழம் சாறுடன் சேர்த்து சாப்பிடலாம்.. ஆனால், இந்த விதைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது கூடுதல் பலனை தரும். இந்த விதைகள், சரும பாதுகாப்புக்கும் நலன் தருபவை.. சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கக்கூடியது.. விதைகளில் சிறிது எடுத்து, பாலில் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் வறட்சி நீங்கும்.. சரும சுருக்கங்களும் நீங்கி, முதுமை தள்ளிப்போடப்பட்டுவிடும்.

இந்த விதைகள் தலைமுடி வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.. இந்த விதையை பவுடராக்கி, சிறிது தேனுடன் கலந்து தலையில் ஹேர்பேக் போல போட்டு வந்தால், தலைமுடி வலுவாகும்.

தவிர்க்கலாம்:

ஆனால், ஒரு ஸ்பூனுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இதனால், மலட்டுத்தன்மை ஏற்படும்.. அதேபோல, கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி விதைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமாம். சர்க்கரை நோயாளிகளும், மூட்டு வலி பாதிப்பிருப்பவர்களும், டாக்டரின் ஆலோசனையை பெற்றே சாப்பிட வேண்டும்.

Related Post

விளாம்பழம்.. வியக்க வைக்கும் பழம்.. பெண்கள் இந்த விளாம்பழத்தை சாப்பிடலாமா.. அடடே இது தெரியாம போச்சே

Posted by - December 22, 2023 0
சென்னை: பல வியாதிகளை குணப்படுத்தும் அற்புத பழம்தான் விளாம்பழம்.. பெண்கள் இந்த பழத்தை சாப்பிடலாமா? விளாம்பழத்தில், இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் A சத்துக்களும் நிறைந்துள்ளன.. பித்தத்தை போக்கக்கூடிய…

உங்கள் BSNL 4G சிம் கார்டில் VoLTE சேவையை எவ்வாறு செயல்படுத்துவது? இதோ வழிமுறைகள்..

Posted by - December 3, 2024 0
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதாவது 4ஜி சேவை, 5ஜி சோதனை, லைவ் டிவி…

உஷார்: அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 32 மாவட்டங்களில் மழை.. எங்கெங்கு தெரியுமா?

Posted by - October 14, 2024 0
TN Rain | 16 – 17 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில்…

15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு

Posted by - January 22, 2025 0
பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள். என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும் என நாம்…

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது நல்லது- தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Posted by - September 15, 2023 0
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்புளூயன்சா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *