மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000… ரேசன் அட்டை இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு

211 0

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது

ரேசன் அட்டை இல்லாமல், மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ரேசன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை ரேசன் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது.

மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் புயல் வெள்ள நிவாரணம் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்று முதல் ரூ. 6000 வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

பிடிஆர் ஆடியோ விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்

Posted by - May 2, 2023 0
‘உங்களில் ஒருவன் பதில்கள் ’ பதிவில் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோ…

ரூ.10 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை: தண்ணீரின்றி கருகிய பயிர்களை டிராக்டரால் உழுது அழித்த விவசாயி

Posted by - July 24, 2023 0
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம்…

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Posted by - September 26, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

Posted by - May 4, 2023 0
காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்காக முன்வைக்கப்படும் அரசியல் முழக்கமே திராவிட மாடல் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன் என விளக்கமளித்து ஆங்கில நாளிதலுக்கு தமிழக…

அதை வாங்கி ஓசி சோரு சாப்புட்ற!! காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை அவமானப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்.

Posted by - July 17, 2023 0
விக்ரமன் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் விக்ரமன். அவர் சின்னத்திரையில் பணியாற்றி இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *