“பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றி” – ஈரோடு இடைத்தேர்தல்.. த.வெ.க வெளியிட்ட அறிவிப்பு!

25 0

திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் இன்று நண்பகல் 12 மணியளவில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி காலை 11 மணியளவில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி போட்டியிடுவது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்ததை அடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 25ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக மற்றும் பாஜக அறிவித்துள்ள நிலையில், திமுகவும், நாம் தமிழர் கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதை அடுத்து இதுவரை தேர்தலில் போட்டியிட 9 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் இன்று நண்பகல் 12 மணியளவில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி காலை 11 மணியளவில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

இதையடுத்து வரும் 18ஆம் தேதி வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரான மணீஷ் பரிசீலனை செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 25ஆம் தேதி பதிவாகும் வாக்குகள், பிப்ரவரி 28ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிடவில்லை என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் விஜயின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது த.வெ.க.வும் போட்டியில்லை என்று அறிவித்துள்ளது.

Related Post

“பா.ஜ.கவுக்கும் எனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” – பிரதமர் மோடி

Posted by - March 19, 2024 0
பிரதமர் மோடி தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. நேற்று பா.ம.க சேர்ந்துள்ளதால். ராமதாஸின் அனுபவ அறிவும் , அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு…

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி… அண்ணாமலை அதிரடி பேட்டி

Posted by - April 6, 2023 0
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக…

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா ? விசாரணை நடத்த இ.பி.எஸ் வலியுறுத்தல்..!!

Posted by - May 8, 2024 0
சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா இல்லையா என்பதை நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி…

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… இதுதான் காரணமா?

Posted by - June 1, 2023 0
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக…

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Posted by - March 22, 2024 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *